Posts

Showing posts from January, 2026

கலித்தொகைக் பாடல்கள்... 12

  ரசனைக் குறிப்பகள்: 12   அஞ்சியது ஆங்கே அணங்காகும்      கேட்கும்போதே நடுக்கத்தையும் வெறுப்பையும் தந்த ‘நாம் அஞ்சுகிற எதுவோ அதுவே அணங்காகிற’தென்ற சொல் உண்மைதான் தோழி. சொல்கிறேன் கேள்:   என் அழகைப் பாராட்டி நாளும் புதிது புதிதாக அவர் சொல்லும்போது, இதில் ஏதோ இருக்கிறதென அப்போதே நான் நினைத்தேன்தான். ஆனாலும் பெரிதாக அதை எடுக்கவில்லை. அதை உண்மையாக்கிக் கொள்ள சம்பவம் நடந்திருக்கிறது.   வாசம் வீசும் படுக்கையில் படுத்துப் புணர்ந்த பின் என் ஆகத்தில் அவர் அயர்ந்து தூங்கினார். அப்போது, ‘கூர்மையான தந்தங்களையுடைய யானையானது தாகம்மேலிட்டு கானலைக் கண்டு அலமந்தோடும் வெஞ்சுரம் கடந்துசென்று யான் பொருளீட்டி வரும்வரை, தன் முன்னிறைக் கைகொண்ட வளையல்கள் கழலாமல், பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு என் மனையை நிர்வகிக்கும் வலிமை இவள் கொண்டிருக்கிறாளா?’ என பிதற்றினார்.   அதுவே அவர் எண்ணமானால், அவரின்றி நான் வாழும் உளவலிமை எனக்கு இல்லையென்பது உண்மையானால், அவள் மார்பே கதியென்று கிடந்தவர், இப்போத...

கலித்தொகைப் பாடல்களின்... 11

  ரசனைக் குறிப்புகள் 11 மடமான்போல் நின்னாங்கு வரும் என் நெஞ்சு   தினைப் புன விளைச்சலை யானை வந்தழிக்கிறபோது, கவண் வீசி அதைக் கலைப்பர் புனக் காவலர். அப்போது அக் கவண் கற்கள் பூமரங்களையும் தாக்கி அதன் கொம்பர்களை முறித்துப் போடும். அவ்வாறான மலையின் வழியானது வெப்ப மிகுதியால் கடத்தற்கரியதாய்ப் போயிருக்கும். அத்தகைய வழி கடந்து தனித்துச் செல்ல எண்ணியிருக்கிறாய் நீ. அப்போது நானிங்கே வாடியிருத்தல் தவிர்க்க முடியாததாகும். அது ஊராரின் நகைப்பிற்கே என்னை இடமாக்கும். அதன்மேல் நான் உண்பதும் வாழ்வதும் அர்த்தமற்றதாகிவிடும். சுவைத்த பின் ஒதுக்கிவிடப்பட்ட பெண்மேனி, நீருண்ட பின் வீசப்பட்ட பிளாவை ஒத்ததாகும். நலமெலாம் அனுபவித்துக் கைவிடப்பட்ட பெண்கள், வதிவோர் நீங்கிப் போன வெற்றூரை ஒத்தவராவர். சுகித்த பின் ஒதுக்கிவிடப்பட்ட பெண்கள், தலையிலிருந்து வீசப்பட்ட காய்ந்த பூச்சரம் ஒத்தவராவர். நானும் உன்னால் அன்னவர்போல் ஆகிவிட்டேன். பரவாயில்லை. கொலைவெறியோடு துரத்திய நாயிடமிருந்து தப்பியோடிய மானானது வேடனிடம் அகப்பட்டுக்கொண்...

கலித்தொகைப் பாடல்களின்.... 10

  ரசனைக் குறிப்பு:10   மகன் அல்லை   செம்மையான மொழிகளால் இனிமை கெழுமப் பேசி நீ என்னைப் புணர்ந்த அந்நாள், அவையெல்லாம் பொய்யானவை என்பதை நான் எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?   அந்தப் பொய்யை உறுதிப்படுத்தத்தான் இப் பெரிய ஊரெங்கும் என்னைப் பேசுபொருளாக்கிவிட்டு எரிக்கும் வெஞ்சுர வழி கடந்து நீ பொருள் தேடி வர புறப்படுகிறாய் போலும்!                                                            நீ மனிதனே இல்லை.   என்னவாவது செய்துகொள்.   ஆனால் அவ்வாறு சென்று நீ வினை செய்யும் காலத்தில், அவளன்பை எண்ணாமல் நான் கைவிட்டு   வந்தவள் எங்ஙனமுள்ளாளென அங்கு வரும் யாரையும்தான் கேட்டுவிடாதே.   அவ்வண்ணம் கேட்டால் எந்த நோக்கத்தில் சென்றா...

கலித்தொகைப் பாடல்களின்... 9

  ரசனைக் குறிப்புரை : 9 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை!   (பாலைக் கலியிலுள்ள பதினேழாம் பாடலிது. இதில் பன்னிரண்டு வரிகளுள. இதிலொரு முழுமை உளதெனினும், இதுவே முழுதான பாடலென்று நான் எண்ணவில்லை. இது, சிதைந்துபோன ஏட்டுப் பிரதியிலிருந்து பதிப்பாசிரியர் கண்டெடுத்த முழுமையாக இருக்கலாம். ஏனைய பாலைத் திணைப் பாடல்களிலிருந்து சொல்லும் முறையில் ஓர் அடாவடித்தனமானதும், எடுத்தெறிந்த வாழ்க்கைமுறையைக் கொண்டதுமான ஒரு இறுமாந்த புலவனின் கூற்றை இப் பாடலின் அர்த்த வெளிப்பாட்டில் நான் காண்கிறேன். அதனால் இது என் ரசனையின் பதிவாக இங்கே இருக்கிறது. இதில் நாடகப் பாங்கு எதுவுமில்லை. விஷயத்தை நேரடியாகக் கூறுகிற பாடலிது. இதுபோன் ற சங்கப் பாடல்களில் தோழி கூற்றாக ‘எம் தலைவர்’ / ‘எம் காதலர்’ என வருமிடங்களின் பொருத்தமின்மையை பல தடவைகளிலும் உணர்ந்து, யோசித்து வருந்தியிருக்கிறேன். தோழியோ தலைவியோ எம் தலைவரென / எம் காதலரென எவ்வாறு கூறுமுடியும்? தலைவி என் காதலர் / என் தலைவர் என்றும் தோழி உன் காதலர் / உன் தலைவர் எனவும் சொன்னால்தானே பொருத்தம்? இதுபற்றிய ஆய்வுரை ...

கலித்தொகைப் பாடல்களின்....8

  8. அறனோடி விலங்கின்று    (அறன் ஓடிச் சென்று விலக்கியது)   துயருற்றுத் தூக்கமற்ற கண்களில் நீர் சொரிந்துகொண்டிருக்கிறது; கவனிப்பற்றதால் அழகும் அழிந்துகொண்டிருக்கிறது; கைகள் மெலிந்துபோக வளையல்களும் கழன்றோடிவிட்டன. இவையெல்லாம் மறந்து பிரிந்தவர் நலம் மேலெழுந்து வருகையில், தோழி, என்னுள் ஓரெண்ணம் எழுகிறது, சொல்லட்டுமா?   நான் இவ்வண்ணம் துயருழக்கும்படி பிரிந்து சென்றிருந்தாலும் அவர் செல்லிட வழியிலுள்ள கொதி கல்மேல் மழை பெய்யும்படியாக, இசைக்கு இரங்கும் மேகக் கடவுளை நான் வேண்டினால் என்ன?   நானிங்கே புலம்பும்படியாக விட்டு பொருள் விரும்பிச் சென்றார் வழியில் மரத்தின் இலைகள் கிளைகளெல்லாம் வாடும்படி தகிக்கும் சூரியனே, அங்கெல்லாம் உன் சினம் தணிந்து அருளை நீ சொரிகவென நான் இறைஞ்சினால் என்ன?   என் அன்பின் திறம் எண்ணாது என்னை இங்கே துயருறவிட்டு பொருள் தேடிச் சென்றாரின் வழி கடுமையானது. புற்களெல்லாம் எரிந்து தீப்பிழம்பாய்ப் பரவிவரும். அதனூடு வருகையிலே காற்றும் கொதிப்பேறும். அதனால், காற்றே, உன் கட...

கலித்தொகைப் பாடல்களின்... 7

          7. அவவுக் கைவிடுதல்      அது மனும் பொருளே இனிதுறங்க அழகிய பெரிய தோள்களும், அழகிய நீலக் கண்களும், முல்லை மொட்டுக்கள்போன்ற வெண் பல் வரிசையும், வாசனைத் திலகமிட்ட  மணம் வீசும் நெற்றியும், நீளிரும் கூந்தலும், மலரவுள்ள பெரும் பூக்களையொத்த இரு முலைகளின் ஆகமும், அகன்ற அடிவயிறும், பெரிதாகிய சுடர் விரிக்கும் சிறிதாகிய வளைகளினை அணிந்துள்ள முன் கரமும்  கொண்டவளே எனவாங்கு பற்பலவும் பண்டெல்லாம் பதமாகச் சொன்னாய் நீ! இனியன சொன்னதெல்லாம் இன்னாதன செய்தற்கே என்பதனை இன்றறிந்தேன். அது மிக்க துன்பம் தரும். ஏன் இவ்வாறு மாறிக்கொண்டாய்? செய்பொருள் தவிர வேறு உறுதிப் பொருள் உண்டோவென பிறத்தியார் சொல்லும் பிழைபட்ட கருத்தில் நீ உடன்பாடு கொண்டாயோ? பொருள் நன்கு இல்லாவிட்டால் காதலைமட்டும்கொண்டு என்னதான் செய்வதென்ற பேச்சுக்கள் கேட்டா நீயும் பிரிந்து செல்ல முடிவு செய்தாய்? ஐயனே! நேர்மையிலிருந்து விலகிச் சேர்க்கும் பொருளினாலே, நன்கறிவாய், இப் பிறப்பில் மட்டுமல்ல மறுபிறப்பிலும் துன்பம் வரும். என்றும் பிரியாமல் புணர்ந்தினிது வாழ்வதுவே சிறந்த செல்வம் என்றுணர்வாய். ஆத...

கலித்தொகைப் பாடல்களின்... 6

  6. நடுங்குநர் காண்மார்      நகை குறித்தனரே!   செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல எரிமேய்ந்த கரிவறல் வாய்புகுவ காணாவாய்ப் பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான் திரிமருப்பு ஏறோடு தேரறற் கோட,   மரல்சாய மலை வெம்ப மந்தி உயங்க, உரல்போல் அடிய உடம்புயங்கு யானை ஊறுநீர் அடங்கலின் உண்கயம் காணாது சேறுசுவைத்துத் தம் செல்லுயிர் தாங்கும் புயல்துளி மாறிய போக்கரு வெஞ்சுரம்   எல்வளை எம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ?   நலம்பெறு சுடர்நுதால் எம்மொடு நீவரின் இலங்குமாண் அவிர்தூவி யன்னமென் சேக்கையுள் துலங்குமான் மேலூர்தித் துயிலேற்பாய் மற்றாண்டை விலங்குமான் குரல்கேட்பின் வெருவுவை அல்லையோ?   கிளிபுரை கிளவியாய் எம்மொடு நீவரின் தளிபொழி தளிரன்ன எழின்மேனி கவின்வாட முளிஅரில் பொத்திய முழங்கழல் இடைபோழ்ந்த வளியுறின் அவ்வெழில் வாடுவை யல்லையோ? எனவாங்கு அனையவை காதலர் கூறலின், வினைவயின் பிரிகுவ ரெனப்பெரி தழியாது திரி...

கலித்தொகைப் பாடல்களின்... 5

  ரசனைக் குறிப்பு   5   இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடுநவை யார் ஆற்று அறுசுனை முற்றி உடங்குநீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடுந்தாம் பதிபாங்கு கை தெறப்பட்டு வெறிநிரை வேறாகச் சாரல் சாரல் ஓடி நெறி மயக்குற்ற நிரம்பா நீடத்தம் சிறுநனி நீ துஞ்சி யேற்பினும் அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்!   உரனுடை உள்ளத்தை செய்பொருள் முற்றிய வளமையான் ஆகும் பொருளிது வென்பாய்!   இளமையும் காமமும் நின்பாணி நில்லா இடைமுலைக் கோதை குழைய முயங்கும் முறைநாள் கழிதல் உறாமைக் காண்டை!   கடைநாள் இதுவென்று அறிந்தாரும் இல்லை போற்றாய், பெரும! நீ காமம் புகர்பட வேற்றுமைக்கொண்டு பொருள்வயிற் போகுவாய் கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி.   ( பாலைக் கலி: 11)   நீ தூக்கத்தில் சற்று நீண்டநேரம் கிடந்தாலும் அந்த அணுக்கமின்மையையே ஒரு பிரிவாக எண்ணி இனைபவள் என் தலைவி.   அப்படியானவளைத் தனியே விட்டுவிட்டு பொருள் தேடிவர செல்ல நினைக்கிறாயே நான் சொல்பவைகளைச...

கலித்தொகைப் பாடல்களின்... 4

  ரசனைக் குறிப்பு 4   அரிதாய அறனெய்தி அருளிலோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர் வருவர்கொல், வயங்கிழாஅய்! வலிப்பல் யான், கேஎள் இனி. அடிதாங்கும் அளவின்றி, அழலன்ன வெம்மையால் கடியவே, கனங்குழாஅய், காடு என்றார், அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே!   இன்பத்தின் இகந்தொரீஇ, இலைதீர்ந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடு என்றார், அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே!   கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரும் தகையவே காடு என்றார், அக்காட்டுள் இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே!   எனவாங்கு இனைநலம் உடைய கானம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே! (பாலைக் கலி: 10)   அறப் பண்பு ...