Posts

Showing posts from January, 2015

பாரபாஸ்

-தேவகாந்தன்  பேர் லாகர்க்விஸ்ட் என்கிற சுவீடிய எழுத்தாளரின் ‘பாரபாஸ்’  நாவலை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். க.நா.சு.வின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இந்த நாவலை அது வெளிவந்த 1995ஆம் ஆண்டிலேயே வாசித்திருந்தும், இருபதாண்டுகளுக்கு பிறகான இப்போதைய வாசிப்பிலும் நாவல் தன் வீர்யம் குறையாத அழகுடன் விளங்குவதைக் காண முடிந்திருந்தது. வாசிப்பின் சுகம் அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் மொழி, நடை ஆகியன நவீன எழுத்தியலின் ஊடாகக்கூட குறையாதிருந்தமை முக்கியமானது. இந் நாவல் 1950இல் வெளிவந்திருக்கிறது அதன் மூலமொழியில். இதன் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பு 1955இல் ‘அன்புவழி’ என்ற பெயரில் அ.கி.ஜெயராமனால் வெளியிடப்பட்டதை தமிழ் பதிப்புரை தெரிவிக்கிறது. மூல நாவலுக்கு 1951இல் நோபல் பரிசு கிடைத்தது. அதற்கு  மூன்று நான்கு ஆண்டுகளிலேயே   இதன் கலாநேர்த்தி கண்டறியப்பட்டு  க.நா.சு.வினால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிகிறபோது வியக்காமலிருக்க முடியவில்லை. 1953இல் அரங்காக்கமாகவும், 1961இல் அன்ரனி குயின் நடிப்பில் சினிமாவாகவும் பாரபாஸ் அடைந்த விருத்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. அ.கி.ஜெயராமனால்  வெளியிடப்ப