Posts

Showing posts from April, 2012

லங்காபுரம்

Image
தேவகாந்தனின் "லங்காபுரம்" - முதல் வாசிப்பின் பகிர்தல்கள்.. பிரதீபன் சிவபாலன் தேவகாந்தன் அவர்களின் லங்காபுரம், விதி ஆகிய நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். வைகறை பத்திரிகையில் தொடராக வெளிவந்து இன்று அச்சுருப்பெற்று வெளியாகும் இந்த லங்காபுரம் நாவலுக்கு என்னை முதல் வாசகனாக இருக்கச் சொல்லிக் கேட்ட தேவகாந்தனின் அன்புக்கு முதலில் நன்றியை சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாவலின் மீதான முதல் தொடுகையை நானும் செய்திருக்கிறேன் என்பது என்னளவில் திகில் மிகுந்த பரவசமானது. எல்லா நூல் வெளியீட்டிலும் நான் நினைத்திருக்கிறேன் வெளியிடப்படும் அந்த நூலை முதன் முதலில் வாசிப்பவர்கள் என்ன விதமான மனநிலையை அடைவார்கள் என்று – இன்று அந்த முதல் மனநிலையின் சில நொடிகளைத் தன்னும் உங்களோடு பேசும் சந்தர்ப்பத்தை அச்சத்துடன் கூடிய பொறுப்பாகவே உணர்கிறேன். இதனையும் தாண்டி இந்த நூலுக்கு ஒரு விமர்சனத்தையோ மதிப்புரையையோ என்னால் முன் வைக்க முடியாது என்பதை வாக்குமூலமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். “கதைகள் இன்பத்துக்காகவே புனையப்படுகின்றன. இன்பத்துக்கான புனைவுக