Posts

கலித்தொகைப் பாடல்கள்... 29

  ரசனைக் குறிப்புகள்: 29 வாரணவாசிப் பதம் கொண்டாயோ? (வாரணவாசிப் பதம் என்பது, பிறர் துன்பத்தையும் தன் துன்பமாய் உணர்தல்.)   வெள்ளென்று தெரியும்படி தேமல் படர்ந்த அடியகன்ற அழகிய முலைகளும், சுருக்கற்று இளமையின் வீறுடன் மிளிரும் நெற்றியும், வாசம் வீசும் மாலையணிந்த அடர்ந்த கருங் கூந்தலும், படர்ந்திருக்கும் ஒளிர் தேமல்கொண்ட மேனியும், ஒயிலாய் வளைந்த முன்கைகளும், மடிப்புள்ள அடிவயிறும் கொண்டவளே! கண் நிறைந்த அழகியலாரைக் கண்டவரில் காமநோய் எழுந்து படரும்படியும் உயிரைமட்டும் எஞ்ச விட்டுப் போதலும் பெண்தன்மையல்ல என்றுகூறி ஒருவன் வணங்கினான்; கண்ணில் நீர் ததும்ப நின்று நடுங்கினான்; போர் யானைபோன்ற தன் தகைமையெல்லாம் அழிந்து உள்ளே உடைந்துவிட்டான்போலும், தலைவீ, அவன்! இவற்றுக்கெல்லாம் ஏது காரணமாய் இருக்கும்?   தெருவிலே இதுமாதிரி பலர் காரணமின்றிக் கலங்கி நிற்பார்கள். அவர்கள் படும் துயரை நீ உன்னதாக வாரணாசிப் பதம் பெற்றவள்போல் உணரவேண்டியதில்லையெனவே என்னால் சொல்லமுடியும், தோழீ, இது குறித்து.   மொட்டுப்போன்ற முலைகளில் தவழும்படி தேர்...

கலித்தொகைப் பாடல்கள்... 28

  ரசனைக் குறிப்புகள்: 28 உன்னைப் பழி வாங்குவதற்காகவே மடலேறுவேன்!   ஐவகையாய்ப் பின்னிவிடப்பட்ட நீள் கூந்தல்; அழகு வாய்ந்த பெருங் கண்கள்; அதில் மடப்பமான பார்வை; பசுமையான கார் காலத் தளிர் மேனி; அழகொளிரும் நெற்றி; பூ மொட்டுப்போல் அழகிய கூர்ம் பற்கள்; கொடிபோன்ற இடையெனக் கொண்ட நீ, பரல்கள் உள்ளிருந்து ஒலிக்கும் வளையல்களை முன்கைகள் நிறைய அணிந்தபடி உன் கைகளை வீசினாய். அதுவோ என் ஆருயிரைக் கவ்விக்கொண்டதடீ. நீயோ, அதைக்கூட அறியாது செல்லுகின்றாய். நான் சொல்வதைக் கேள்:   என் உயிரை உன் மிகையழகு உண்டதையோ, காதல்நோய் என்னில் வெகுத்து உள்ளதையோ இளவயதுக்காரியானதால் நீ அறிந்துகொள்ளவில்லையென நான் எடுப்பேன். ஆனால் நீயோ, இவை எதுபற்றியுமே யோசியாமல் தம் வசதிக்கேற்றபடி அணிகள் பல புனைந்து வெளியே செல்லவிட்ட உன் உற்றாரிலும் பிழையில்லை என்கிறாயே!   நடை மெலிந்து, அயர்வுற்று நாளும் நாளும் நான் நலிவதை புரியும் அனுபவம் உனக்கில்லைதான். ஆனால் நீயோ ஈதொன்றும் அறியாமல் தம் செல்வ மிகுதியினால் உன்னை நகைகளால் அலங்கரித்து வெளியே செல்லவிட்ட...

கலித்தொகைப் பாடல்கள் 27

  ரசனைக் குறிப்புகள்: 27   அரசனின் தவறுதான்   ஊரின் சோலைக்கண் வாய்க்காலோரமாய் உள்ளது கொன்றை மரம். அதன் பூக்கொண்டு கட்டிய சரத்தினால் அதுவும் கூந்தலும் ஒன்றாகும்படி அணிசெய்து விட்டிருக்கிறார்கள் வீட்டிலே. அந்தப் பூமாலையும் கூந்தலுமோவெனின் அவளது தோளில் தொங்கிக் கிடக்கின்றன. கருங்கூந்தல் கவிந்ததனால்போலும் அவள் முகம் மேலும் மேலுமாய்ச் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வருபவள் எவளாயிருப்பாள்? ஒருவேளை சிறந்த கலைஞன் ஒருவன் தன் கைவண்ணத்தில் தைத்துருவாக்கிய பாவையோ அது? சிறப்புகள் கொண்ட அவயவங்கள் தேடி படைக்கப்பட்ட ஒரு பெண்ணாயிருக்கலாமோ? ஆடவர்மேற்கொண்ட வெறுப்பினால் யாரோ கொண்ட அணங்கின் வடிவமோ அது? இப்படியானவளை ஏன் இவ்வாறு காவலின்றி விட்டிருக்கிறார்கள்? ஒருவேளை, செல்வமுள்ள பெற்றோர்க்கு அருமையாய்க் கிடைத்த ஒரு செல்ல மகளோ இவள்? இவளோடு கதையாடி இவள்பற்றி நான் அறிந்து வரப்போகிறேன்.   ‘அன்னம்போல் சாயலும், மயில்போல் ஒயிலும், புறவுபோல் திட்பமும், மான்போல் மருட்சியும் கொண்ட பேரழகியே! இவையெல்லாம் உனைக் கண்டாரைப் பேத...

கலித்தொகைப் பாடல்கள் 26

  ரசனைக் குறிப்புகள்: 26 என்னைப் பித்தேறச் செய்தான்   கொடிப் பூவும் கோட்டுப் பூவும் நீரின்றிக் காய்ந்து போனதில் பொன்னினால் செய்த பூவாத பூக்களை மாலையாக்கி அணிந்தவளும், வளையல் செறிந்த முன்கைகளைக் கொண்டவளும், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுமான பெண்ணே, உன் காலடியில் வந்து விழுந்திருந்தும் கருணையின்றி விலகிச் செல்லல் நியாயம்தானா? என்று சொல்லி கஸ்தூரி வாசம்வீசும் என் கருங்கூந்தலை கொள்ளப் பற்றி அதை விரல்களிலே சுற்றிக்கொண்டு முகரச் செய்தான்; பின் நறவம்பூ மலர்ந்ததுபோன்ற என் விரல்களைப் பிடித்துக்கொண்டு கோபமில்லாமலே சிவந்த தன் கண் மறைத்தபடி ஊதுலைபோல் மூச்சுவிடச் செய்தான்; தொய்யில் எழுதிய என் சின்ன முலைகளைத் தடவியபடி பிடியினைத் தழுவும் களிறுபோல் தன் பெரிய கைகளினால் அவன் மூர்க்கமாய்த் தழுவியதில் என் உணர்ச்சிகளை உச்சமேறச் செய்தான்; அதனால் என் உடம்பில் கொதித்திருந்த காமமும் அவனால் அடங்கியதாயிற்று. எனவே என் திருமணத்தை தோழி செவிலிக்குரைத்தல், செவிலி நற்றாய்க் குரைத்தல், நற்றாய் தந்தை தனையர்க்குரைத்தல் என்ற மரபுப்படி என் ...

கலித்தொகை பாடல்கள்... 25

  ரசனைக் குறிப்புகள்: 25 என்னைப் பித்தேறச் செய்தான்   கொடிப் பூவும் கோட்டுப் பூவும் நீரின்றிக் காய்ந்து போனதில் பொன்னினால் செய்த பூவாத பூக்களை மாலையாக்கி அணிந்தவளும், வளையல் செறிந்த முன்கைகளைக் கொண்டவளும், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுமான பெண்ணே, உன் காலடியில் வந்து விழுந்திருந்தும் கருணையின்றி விலகிச் செல்லல் நியாயம்தானா? என்று சொல்லி கஸ்தூரி வாசம்வீசும் என் கருங்கூந்தலை கொள்ளப் பற்றி அதை விரல்களிலே சுற்றிக்கொண்டு முகரச் செய்தான்; பின் நறவம்பூ மலர்ந்ததுபோன்ற என் விரல்களைப் பிடித்துக்கொண்டு கோபமில்லாமலே சிவந்த தன் கண் மறைத்தபடி ஊதுலைபோல் மூச்சுவிடச் செய்தான்; தொய்யில் எழுதிய என் சின்ன முலைகளைத் தடவியபடி பிடியினைத் தழுவும் களிறுபோல் தன் பெரிய கைகளினால் அவன் மூர்க்கமாய்த் தழுவியதில் என் உணர்ச்சிகளை உச்சமேறச் செய்தான்; அதனால் என் உடம்பில் கொதித்திருந்த காமமும் அவனால் அடங்கியதாயிற்று. எனவே என் திருமணத்தை தோழி செவிலிக்குரைத்தல், செவிலி நற்றாய்க் குரைத்தல், நற்றாய் தந்தை தனையர்க்குரைத்தல் என்ற மரபுப்படி என் ...

கலித்தொகைப் பாடல்கள் 24

  ரசனைக் குறிப்புகள்: 24   இவளின்றி நான் வாழேன்!   முறம்போன்ற செவியின் மறைப்பிடமாய் பாய்ந்து தாக்கிய புலிய, அறமல்லாதன செய்த துரியோதனனின் தொடையைத் தாக்கி பீமசேனன் கொன்றதுபோல் அதன் தொடையைத் தன் தந்தங்களால் குத்திக் கொன்ற யானையானது, மல்லர்களை வென்ற திருமால்போல் தன் சுற்றத்துள் பெருமிதமாய் நடந்து திரியும் நாடனே, இதைக் கேள்:   மாலை சூடிய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு தாமரை மலர் மாலை அணிந்து தண்ணறும் சாந்து மார்பில் பூசி நீ வரின், மணம் வீச மலை வழியில் நின்று பலியெடுக்கும் அணங்கு என மலை வாழ்நர் உன்னை எண்ணிவிடுவர்.   தொங்கும்படியான கூந்தலுள்ள என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு ஈர ஆடையோடும் இருட்டிலேயும் நீ வரின் தீப்பந்தம் ஏந்துவோர், கவண் எறிவோர், அம்பெய்வோராகிய தினைப் புனக் காவலர் உன்னைக் களிறென்று ஆர்ப்பரிப்பர்.   அகன்ற அடிவயிற்றையுடைய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு அவள்மீது அன்புகொண்டவனும் மலைநாட்டுத் தலைவனுமாகிய நீ வரின் புலியென ஊர் உன்னை எண்ணிவிடும். அவ்வாறு விலங்கென எண்ணாது உண்ம...

கலித்தொகை பாடல்கள் 23

  ரசனைக் குறிப்புகள்: 23 கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான்!   கையில் சுடர்கொண்ட வளைகள் அணிந்தவளே, கேட்பாயாக. மண்வீடு கட்டி விளையாடிய காலத்தில் அதை ஓடிவந்து காலாற் சிதைத்தும், நம் தலையிலுள்ள மாலையை அறுத்தும், விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு ஓடியும் நம்மை வருத்திய சின்ன வம்பன், அன்றொருநாள் அன்னையும் நானும் இருந்தபொழுதில், ‘வீட்டுக்காரரே! வீட்டுக்காரரே!’ என அழைத்து தனக்குத் தாகமாக இருக்கிறதென்றும் தண்ணீர் கொஞ்சம் தரும்படியும் கேட்டான். அதற்கு அன்னை எனை நோக்கி, பொற்பாத்திரமெடுத்து நீர் கொடுத்துவரச் சொன்னாள். நானும் எதையும் யோசியாது சென்று நீரைப் பாத்திரத்திலெடுத்து கொடுக்கும்வேளையிலே அவன் என் முன்கையைப் பற்றியிழுத்தான். நானும் பயந்துபோய், ‘அம்மா, இவன் செய்வதைப் பா’ரெனக் கத்திவிட்டேன். அன்னை அலறிக்கொண்டு ஓடிவந்தாள். உடனே நான், ‘இவனுக்கு தண்ணீர் விக்கிவிட்டது’ என பொய் ஒன்று சொன்னேன். அன்னையும் அவனது கவனமின்மையைப் பரிவாகக் கண்டித்து அவனது முதுகை நீவிவிட்டாள். அந்தக் கள்வன் மகனோ, கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் ந...