Posts

கலித்தொகைப் பாடல்கள் 24

  ரசனைக் குறிப்புகள்: 24   இவளின்றி நான் வாழேன்!   முறம்போன்ற செவியின் மறைப்பிடமாய் பாய்ந்து தாக்கிய புலிய, அறமல்லாதன செய்த துரியோதனனின் தொடையைத் தாக்கி பீமசேனன் கொன்றதுபோல் அதன் தொடையைத் தன் தந்தங்களால் குத்திக் கொன்ற யானையானது, மல்லர்களை வென்ற திருமால்போல் தன் சுற்றத்துள் பெருமிதமாய் நடந்து திரியும் நாடனே, இதைக் கேள்:   மாலை சூடிய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு தாமரை மலர் மாலை அணிந்து தண்ணறும் சாந்து மார்பில் பூசி நீ வரின், மணம் வீச மலை வழியில் நின்று பலியெடுக்கும் அணங்கு என மலை வாழ்நர் உன்னை எண்ணிவிடுவர்.   தொங்கும்படியான கூந்தலுள்ள என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு ஈர ஆடையோடும் இருட்டிலேயும் நீ வரின் தீப்பந்தம் ஏந்துவோர், கவண் எறிவோர், அம்பெய்வோராகிய தினைப் புனக் காவலர் உன்னைக் களிறென்று ஆர்ப்பரிப்பர்.   அகன்ற அடிவயிற்றையுடைய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு அவள்மீது அன்புகொண்டவனும் மலைநாட்டுத் தலைவனுமாகிய நீ வரின் புலியென ஊர் உன்னை எண்ணிவிடும். அவ்வாறு விலங்கென எண்ணாது உண்ம...

கலித்தொகை பாடல்கள் 23

  ரசனைக் குறிப்புகள்: 23 கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான்!   கையில் சுடர்கொண்ட வளைகள் அணிந்தவளே, கேட்பாயாக. மண்வீடு கட்டி விளையாடிய காலத்தில் அதை ஓடிவந்து காலாற் சிதைத்தும், நம் தலையிலுள்ள மாலையை அறுத்தும், விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு ஓடியும் நம்மை வருத்திய சின்ன வம்பன், அன்றொருநாள் அன்னையும் நானும் இருந்தபொழுதில், ‘வீட்டுக்காரரே! வீட்டுக்காரரே!’ என அழைத்து தனக்குத் தாகமாக இருக்கிறதென்றும் தண்ணீர் கொஞ்சம் தரும்படியும் கேட்டான். அதற்கு அன்னை எனை நோக்கி, பொற்பாத்திரமெடுத்து நீர் கொடுத்துவரச் சொன்னாள். நானும் எதையும் யோசியாது சென்று நீரைப் பாத்திரத்திலெடுத்து கொடுக்கும்வேளையிலே அவன் என் முன்கையைப் பற்றியிழுத்தான். நானும் பயந்துபோய், ‘அம்மா, இவன் செய்வதைப் பா’ரெனக் கத்திவிட்டேன். அன்னை அலறிக்கொண்டு ஓடிவந்தாள். உடனே நான், ‘இவனுக்கு தண்ணீர் விக்கிவிட்டது’ என பொய் ஒன்று சொன்னேன். அன்னையும் அவனது கவனமின்மையைப் பரிவாகக் கண்டித்து அவனது முதுகை நீவிவிட்டாள். அந்தக் கள்வன் மகனோ, கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் ந...

கலித்தொகைப் பாடல்கள் 22

  ரசனைக் குறிப்புகள் 22 இரவில் வராதே ; பகலில் வா!   ‘தாக்கிய வரிப் புலியை வென்ற யானையானது மலையோரத்தில் வலியோடு தூங்குகையில் நனவிலே செய்த அப் புலிப் போர் அப்போதும் மனத்தில் இருந்ததால் அதைக் கனவிலும் கண்டு அது திடுக்கிட்டு எழுந்தது.   ‘எதிரே பூத்திருந்த வேங்கை மரத்தை நிஜப் புலியென நினைத்து அதை முருக்கி அழித்துச் சினம் தணிந்தது. பின் அம் மரத்தை காணும்பொழுதில் நிமிர்ந்து காண நாணித் தலைகவிழும் நாடனே’ என விளித்து தோழி சொல்கிறாள்:   மலர்போன்ற விழிகொண்ட இவள்மேல் நீ இவ்வளவு காதல் கொண்டுள்ளாய் என்பது அறிகையில் இனிமையான விஷயம்தான். ஆனால் இடியென்றும் மழையென்றும் பாராமல் மின்னலையே ஒளியாகக் கொள்ளும்படியான கடுவழியில் நீ வருவது துயர் தருவதாகும்.   இவளை இன்புறச் செய்யும் நீ இவள்மாட்டு இவ்வளவு அன்பு கொண்டுள்ளாய் என்பது அறிகையில் இனிமையான விஷயம்தான். ஆனால் மேகங்கள் தவழும் மலை அடுக்கத்தில் வாசனை தவழும் மார்போடு அணங்குகள் நடமாடும் வழியில் நீ வருவது துயர் தருவதாகும்.   இருள்போல் கருங்கூந்தல் கொண்ட இவளிடம் ...

கலித்தொகைப் பாடல்கள் 21

  ரசனைக் குறிப்புகள் 21 குறியிடம் வரச் சொல்   ஏது இதுவென்று எனக்குத் தெரியவில்லை, தோழி. என்னிடம் எதையோ இரக்கப் போவதுபோல் மிகப் பணிவாக வந்து பேசுகிறான் ஒருவன். உலகைக் காக்கும் உரம் கொண்டான்போல் தோற்றத்தில் காணப்படுகிறான். அறிவுள்ளோரை வணங்கிக் கற்றதனால் அறிவு கொண்ட நல்லவர்களின் அடக்கம் அவனிடம் காணப்படுகிறது. துன்பப்பட்டோரின் துயர் தவிர்க்கும் வன்மை உடையவனாகவும் தெரிகிறான். இருந்தும் தன் பீடு பெருமையெல்லாம் துறந்து என்னிடம் என்னென்னவோ பேசினான். ‘நீயின்றி நான் உயிர் தரியேன்’ என்றான் ஒருபொழுது. அம்மாதிரிப் பேச்சை எவராலும் நம்புவது கடினமல்லவா? ‘நான் உன்னால் எவ்வளவு துயர்ப்படுகிறேனென நீ அறியாய்’ என்றும் சொன்னான். தன் வலையில் வீழ்ந்தவரிடமெல்லாம் இவன் இப்படித்தான் பேசியிருப்பானா? ‘நீ விலகிப் போனால் வாழமாட்டேன்’ என்றான் பிறகு. இவன் பேச்சை நம்பினால் எல்லாரும் என்னை அறிவில்லாதவள் என்றல்லவா பழிப்பார்கள்? என்ன செய்வது என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லையே! எதையும் செய்வதன் முன்பாக, தோழி, அதுபற்றி நாம் சேர்ந்து பேசிக்கொள்வோம். அதற்கு தோழி சொல்கிறா...

கலித்தொகைப் பாடல்கள் 20

  ரசனைக் குறிப்புகள் 20   நட்டார்க்குத் தோற்றலை நாணாதவன்   வெறிகொண்டு வேங்கையொன்றினைக் கொன்ற புள்ளித் தோல் யானையின் தந்தத்தினாலும்,இளவண்டு மொய்த்துத் திரியும் சந்தன மரத்தினாலும் ஆன உலக்கைகளை எடுத்துக்கொண்டு, கல்லுரலுள் நெல்லைப் போட்டு, வா, தோழி, குற்றத் தொடங்குவோம். அப்போது கடவுளை ஏற்றிப் போற்றுவதுபோல் தலைவனைப் புகழ்ந்து பாடுவோம். கூற்றுவன் பகையோடு எதிர்வந்தாலும் புறமுதுகிடாதவன் மலையிலே, பெண்களின் விரலணிபோல் காந்தள் முகையிலே தும்பிகள் மொய்த்திருக்கும். தன் நண்பர்களாயின் அவர்களுக்கு அன்பால் தோற்கவும் பின்னிற்காதவன். இருளடைந்த மலைப் பகுதியிலே வருடை மான் குட்டியொன்று ஓடித் திரிவதைக் கண்ட கருங்குரங்கு அச்சத்துடன் பார்க்கும் காட்சிகள் கொண்டது அவனது மலை.   தோற்றுப் பின்வாங்கும் எதிரிகளைக்கூட இகழாத இயல்பினன் அவன். பட்டையானது முதிர்ந்ததும் இயல்பில் கழன்றுவிடும் மூங்கில் மரங்களைக் கொண்டது அவனது மலை.   புலியின் பாதங்களைப்போன்ற காய்களைக்கொண்ட வாழைகள் நிறைந்தது அவனது மலை. அவனோ வறுமைத் துயரடைந்த விதம் சொன்னோரின் குறை தீர்க்க முடியாவிட்டால் தன்னுயி...

கலித்தொகைப் பாடல்கள் 19

  ரசனைக் குறிப்புகள்: 19 சுடருள் இருள் தோன்றியற்று   யானைத் தந்த உலக்கையால் சேம்பின் இலையைச் சுளகாகக் கொண்டு மூங்கில் நெல்லை கல்லுரலுள் போட்டு குற்றியபடி நாம் நெல்லு குற்றும் பாட்டு பாடுவோம் தோழி, வா.   நள்ளிரவு; இடி இடிக்கிறது; மழை பெய்கிறது; மின்னல் அடிக்கிறது. யானைகள் தம் இணைகளோடு வந்து வயலில் இறங்கிய சத்தம் கேட்ட கானவன் ஆசினி மரத்தின் உச்சிப் பரணுக்கு ஏறுவான்; கவணில் கல் தொடுத்து அங்கிருந்து எறிவான்; அது விசையாய்ச் சென்று வேங்கை மரப் பூக்களை உதிர்த்து மேலே பாயும்; வழியில் தேன் கூட்டைத் துளைக்கும்; அப்பால் வாழை மடலைக் கிழித்துக்கொண்டு போய் பலாப் பழத்துள் தங்கும்; அவ்வாறான மழைநாட்டையே பாடுவோம், தலைவி, வா!   அருவி இருக்கின்றதா, அருவியும் இருக்கின்றதா, வான்மழையில் பொங்கிவரும் அருவியும் இருக்கின்றதா, தான் அளித்த சத்தியம் பேணாது பொய்த்தான் மலையில்?   பொய்த்தற்கு உரியவனா, பொய்த்தற்கு உரியவனா, அஞ்சேலென்று அபயமளித்த அவன் பொய்த்தற்கு உரியவனா? அவ்வாறு அவன் பொய்ப்பவனாக இருந்தால் அது ...

கலித்தொகைப் பாடல்கள் 18

  ரசனைக் குறிப்புகள்- 18 குறிஞ்சி 3  நின் கண்ணால் காண்பென்!   நீராடலை விரும்பி யாறு சென்ற தலைவி நீரின் வேகத்தில் அஞ்சி, தளர்ந்து, கண்கள் சொருகி நீரால் இழுப்புண்டு செல்லப்படலானாள்.   அப்போது அங்கே வந்த புன்னை மலர் மாலை சூடிய தலைவன் அது கண்டிரங்கி நீரிலே பாய்ந்து தன் நெஞ்சோடு சேர்த்து அவளைப் பற்றிக் கரைசேர்த்தான்.   அச் சமயம் அவனது அகன்ற மார்பில் அவளது முலைகள் அழுந்திப்போயின. அதனால் தன் கற்புக்குப் பங்கமின்றி அவனையே நம் தலைவி விரும்புதல் செய்துவிட்டாள்.   அவனும்தான் யார்? தினைப் புனத்திலே எழுப்பும் அகிற்புகையானது மேலே சென்று நிலவின் தோற்றத்தை மங்கச் செய்ய, அதை தேன்கூடுவென நினைத்து ஏணி எடுத்துவைக்கும் அகன்ற வளமான காட்டினையுடைய மலைநாட்டுத் தலைவனின் மகனேயாவான்.   வீட்டாரே! வீட்டாரே! ஒன்று ஞாபகம் வைத்திருங்கள். மலை வாழ்நர் அல்லவை செய்தொழுகினால் வள்ளிக் கொடியில் கிழங்கு வீழாது; மலையிலே தேனீக்கள் கூடு கட்டா; தினையிலே கதிர்கள் வளமாகப் பெருகா.   பேரழகுகொண்ட மலைக் கன்னி...