கலித்தொகைப் பாடல்கள்... 15
ரசனைக் குறிப்புகள் 15 எண்ணிய நாள் வரையிறவாது புகுதந்தார் மக்களெல்லாரும் சிறப்புற வாழும்படி ஒருபோது நிலமெங்கும் செழிக்க பாய்ந்துகொண்டிருந்த யாறு, அடிமணல் தெரியும்படி வற்றத் தொடங்கிவிட்டது. தாம் தாழ்ந்திருந்த காலத்தில் தமக்குதவி செய்தார் தாழ்ந்தபோது, முன்சென்று உதவும் உயர் குணத்தார்போல, யாறு வறண்டபோதும் நீருண்ட கரை நிலப் பூமரங்கள் பூத்துப் பொலிந்து அழகை உதவியாய்ப் பகிர்கின்றன. இளவேனில் முழுதுமாய்ப் பிறந்துவிட்டது. காஞ்சி மலரின் மகரந்த மணி குளித்த கருங்குயில் காவில் கூவுகிறது. இளவேனில் வந்துவிட்டதை மீளமீள எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இருந்தும் என் காதலர் செய்து சென்ற தீமை மறந்து என்னால் அப்போதும் இருக்க முடியும். ஆனால் பொய்ச்சாட்சி சொன்னவன் கீழே வர வாடிவிடும் உணர்மரம்போல் என் நெஞ்சில் மூண்டெழும் காதல் கனலானது என்னழகை வாட்டி தன்னிருப்பைக் காட்டிவிடுகிறதே, நான் என்ன செய்வேன்? பூக்களின் பாரத்தால் தாழ்ந்திருக்கும் பூங்கொம்பில் வண்டினம் வந்து மொய்த்து மேலும்...