Posts

கலித்தொகைப் பாடல்கள்..... 17

    (பாலைத் திணையை அடுத்து வருவது குறிஞ்சித் திணை. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்கள் உள. இவற்றில் குறிஞ்சிப் பாடல்கள் 29. இவற்றை கபிலர் பாடியுள்ளார். குறிஞ்சித் திணையானது புணர்தல் ஒழுக்கத்தைக் கொண்டது. மலைப் புறமும் நீரும் அதனாலாகும் காவும், தினைப் புனமும் எல்லாம் கூடலுக்கு வசதியாக இருத்தலில் மக்களின் வாழ்வு அப்படித்தாகி புணர்தலொழுக்கத்தைக் குறிஞ்சி நிலத்துக்கு ஆக்கினர் ஆன்றோர். குறிஞ்சித் திணைப் பாடல்களில், ஏனைய திணைப் பாடல்களைவிட, நாடகப் பாங்கான உரையாடல்கள் அதிகமிருக்கின்றன. அது, கற்போருக்கு மிகுந்த இனிமை செய்யும்.)     ரசனைக் குறிப்புகள் 17 ஓர் நாணின்மை செய்தேன்   தோழீ, ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்பாயாக. வில்லேந்திய ஒருவன் மிருகத்தின் அடியைத் தொடர்பவன்போல வந்து என்னை நோக்கி நிற்பான்; குறிப்பினில் தானுற்ற எண்ணம் காட்டுவானேயன்றி, வார்த்தையேதும் கூறாமல் திரும்புவான். இவ்வாறு பல நாட்கள் நடந்தன. எண்ணியெண்ணி தூக்கமிழந்துபோனேன். எவ்வித உறவுமில்லாத அவன்மீது எனக்கு பரிதாபமுண்டாயிற்று. அவனோ நேரே நின்று பார்த்து ...

கலித்தொகைப் பாடல்கள்... 16

    ரசனைக் குறிப்புகள் 16 வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே!   பலராமனது தோளிலுள்ள மாலைபோல் வெண்கடம்ப மரத்திலுள்ள மயில் அழகாக ஆடிக்கொண்டிருக்கிறது. நரம்பு முறுக்கிக் கட்டப்பட்ட யாழ்போல் தேனுண்ணும் வண்டுகளும் தும்பிகளும் ஆர்த்துக்கொண்டிருக்கின்றன. தோட்டத்தில் பூத்த மலர்களில் தேர்ந்து தேனுண்ண சுரும்புகளை ‘வா… வா!’வென பூங்கொம்பர்கள் அழைக்கின்றன. குயில்களும் ஆங்காங்கிருந்து கூவுகின்றன. எங்கும் ‘ம்’மென்ற இசையொலிப்பு. இவ்வாறாக காமன் விழாக் கொண்டாடும் வேளையுள்ள இளவேனில் வந்தது. ஆனால் காதலர் வரவில்லையேடி!   சிறிது சிறிதாக என் நுதல் முழுவதும் பசந்தது. சிறிது சிறிதாக என் தோள்களும் மெலிந்தன. சாரல் வீசும் காலமெனக் கண்டு என் கண்களும் வெய்ய நீர் உகுத்தன. மலை கடந்து சென்றவர் வரவை எதிர்பார்த்தேங்கிய என் நெஞ்சு முலைகளிடை தீயாய்க் கனன்றெழுகிறது.   காதலையே மறந்தாரா? ஒரு தூதனுப்பவும் நினைக்கவில்லையே! இவ்வாறான அடுக்கடுக்கான சோகங்களால் அவர் வரும்வரையாவது நான் உயிருடன் இருப்பது கூடுமா? எதுதான் நடக்கப் போ...

கலித்தொகைப் பாடல்கள்... 15

    ரசனைக் குறிப்புகள் 15 எண்ணிய நாள் வரையிறவாது புகுதந்தார்     மக்களெல்லாரும் சிறப்புற வாழும்படி ஒருபோது நிலமெங்கும் செழிக்க பாய்ந்துகொண்டிருந்த யாறு, அடிமணல் தெரியும்படி வற்றத் தொடங்கிவிட்டது.   தாம் தாழ்ந்திருந்த காலத்தில் தமக்குதவி செய்தார் தாழ்ந்தபோது, முன்சென்று உதவும் உயர் குணத்தார்போல, யாறு வறண்டபோதும் நீருண்ட கரை நிலப் பூமரங்கள் பூத்துப் பொலிந்து அழகை உதவியாய்ப் பகிர்கின்றன.   இளவேனில் முழுதுமாய்ப் பிறந்துவிட்டது. காஞ்சி மலரின் மகரந்த மணி குளித்த கருங்குயில் காவில் கூவுகிறது. இளவேனில் வந்துவிட்டதை மீளமீள எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இருந்தும் என் காதலர் செய்து சென்ற தீமை மறந்து என்னால் அப்போதும் இருக்க முடியும். ஆனால் பொய்ச்சாட்சி சொன்னவன் கீழே வர வாடிவிடும் உணர்மரம்போல் என் நெஞ்சில் மூண்டெழும் காதல் கனலானது என்னழகை வாட்டி தன்னிருப்பைக் காட்டிவிடுகிறதே, நான் என்ன செய்வேன்?   பூக்களின் பாரத்தால் தாழ்ந்திருக்கும் பூங்கொம்பில் வண்டினம் வந்து மொய்த்து மேலும்...

கலித்தொகைப் பாடல்கள்.... 14

    ரசனைக் குறிப்புகள்   14 தாம் சொல்லிய பொய்யன்றி புகுதந்தார்   பாய்ந்து வரும் ஆற்றுநீர் கால்வாய்களில் ஓடி வறண்டிருந்த இடங்களை அழகுபெற வைத்திருக்கிறது. குளங்களுக்கு நீரடித்துப் பாய்ந்த அயலிலே வரிவரியாய் நுண்மணல் திரண்டிருக்கிறது. அதை மூடி உதிர்ந்து கிடக்கின்றன ஈங்கை மரப் பூக்கள். காதலர்ப் பிரிந்தவர் நெற்றி நிறத்தில் பீர்க்குகளும் பூத்துவிட்டன. புணர்ந்தவர் முகம்போல பொலிந்திருக்கின்றன பொய்கையில் பூக்கள். உடம்பை நடுக்கும் பனியோடு வாடையும் சேர்ந்து என்னைக் கலங்கச் செய்கின்றது. அன்றொரு நாள் புணர்ச்சிவேளையின் உச்சத்தில் பிரியேனென்று ஒரு வார்த்தை சொன்னார். நாடு வென்று   வெல்புகழ் வீரராய் யானைமேல் ஏறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெல்லாம் என்னை உயிர் தின்னாமல் வைத்திருக்குமா?   தன் நிறை கதிர்களை வீசி நிலா எறிக்கிறது. வாடைக்காற்றும் குளிரோடு சேர்ந்து கடுகி வீசுகிறது. படை வென்று வெற்றி வீரராய்       குதிரையேறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெ...

கலித்தொகைப் பாடல்கள்... 13

    கலித்தொகைப் பாடல்கள்: ரசனைக் குறிப்புகள் 13   (கலித்தொகைப் பாடல்கள் பேசும் பெரும்பாலான பிரிவானது பொருள்வயிற் பிரிவாகவே இருக்கிறது. சிலவே போர்வயிற் பிரிவைப் பேசுகின்றன. அவற்றுள் இது ஒன்று.) பலதேவனைப்போல் வெண்ணிறப் பூக்கள் குலுங்கித் துலங்கும் அரசமரம்; சூரியனைப்போல் விரிந்த பூக்களால் ஔி விரிக்கும் செருந்தி; காமனைப்போல் வண்டார்க்கும் பூக்களைக் கொண்ட காஞ்சி; அவன் தம்பி சோமன்போல் பூக் குலுங்கும் ஞாழல்; சிவன்போல் நிறை பூப் பூக்கம் இலவம்; இவையெல்லாமே நதிதீரத்து எழில் மரச் சோலையில் பூத்துப் பொலிந்துவிட்டன. இளவேனில் பிறந்துவிட்டது!   திசையெங்கும் பறந்து தேன்மாந்தி இன்புறும் வரிகொண்ட தும்பிகள் மலிந்த நாட்டில், அலைந்துழன்று அபலைகளாய் வருவோரைப் புரந்து வெற்றியின் புகழோடு வதிந்துகொண்டிருக்கும் தலைவரா, சிறந்த என் அழகெலாம் இங்கே வாடிக்கொண்டிருப்பதை நினக்கப்போகிறார்?   புகலடைய ஏற்ற இடமென்று தாமாகவே வந்து தஞ்சமாகியவரை தளராது தாங்கி அதனால் உலகு புகழ்கொண்டோராய் அந்நிய நாட்டில் உறையு...

கலித்தொகைக் பாடல்கள்... 12

  ரசனைக் குறிப்பகள்: 12   அஞ்சியது ஆங்கே அணங்காகும்      கேட்கும்போதே நடுக்கத்தையும் வெறுப்பையும் தந்த ‘நாம் அஞ்சுகிற எதுவோ அதுவே அணங்காகிற’தென்ற சொல் உண்மைதான் தோழி. சொல்கிறேன் கேள்:   என் அழகைப் பாராட்டி நாளும் புதிது புதிதாக அவர் சொல்லும்போது, இதில் ஏதோ இருக்கிறதென அப்போதே நான் நினைத்தேன்தான். ஆனாலும் பெரிதாக அதை எடுக்கவில்லை. அதை உண்மையாக்கிக் கொள்ள சம்பவம் நடந்திருக்கிறது.   வாசம் வீசும் படுக்கையில் படுத்துப் புணர்ந்த பின் என் ஆகத்தில் அவர் அயர்ந்து தூங்கினார். அப்போது, ‘கூர்மையான தந்தங்களையுடைய யானையானது தாகம்மேலிட்டு கானலைக் கண்டு அலமந்தோடும் வெஞ்சுரம் கடந்துசென்று யான் பொருளீட்டி வரும்வரை, தன் முன்னிறைக் கைகொண்ட வளையல்கள் கழலாமல், பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு என் மனையை நிர்வகிக்கும் வலிமை இவள் கொண்டிருக்கிறாளா?’ என பிதற்றினார்.   அதுவே அவர் எண்ணமானால், அவரின்றி நான் வாழும் உளவலிமை எனக்கு இல்லையென்பது உண்மையானால், அவள் மார்பே கதியென்று கிடந்தவர், இப்போத...

கலித்தொகைப் பாடல்களின்... 11

  ரசனைக் குறிப்புகள் 11 மடமான்போல் நின்னாங்கு வரும் என் நெஞ்சு   தினைப் புன விளைச்சலை யானை வந்தழிக்கிறபோது, கவண் வீசி அதைக் கலைப்பர் புனக் காவலர். அப்போது அக் கவண் கற்கள் பூமரங்களையும் தாக்கி அதன் கொம்பர்களை முறித்துப் போடும். அவ்வாறான மலையின் வழியானது வெப்ப மிகுதியால் கடத்தற்கரியதாய்ப் போயிருக்கும். அத்தகைய வழி கடந்து தனித்துச் செல்ல எண்ணியிருக்கிறாய் நீ. அப்போது நானிங்கே வாடியிருத்தல் தவிர்க்க முடியாததாகும். அது ஊராரின் நகைப்பிற்கே என்னை இடமாக்கும். அதன்மேல் நான் உண்பதும் வாழ்வதும் அர்த்தமற்றதாகிவிடும். சுவைத்த பின் ஒதுக்கிவிடப்பட்ட பெண்மேனி, நீருண்ட பின் வீசப்பட்ட பிளாவை ஒத்ததாகும். நலமெலாம் அனுபவித்துக் கைவிடப்பட்ட பெண்கள், வதிவோர் நீங்கிப் போன வெற்றூரை ஒத்தவராவர். சுகித்த பின் ஒதுக்கிவிடப்பட்ட பெண்கள், தலையிலிருந்து வீசப்பட்ட காய்ந்த பூச்சரம் ஒத்தவராவர். நானும் உன்னால் அன்னவர்போல் ஆகிவிட்டேன். பரவாயில்லை. கொலைவெறியோடு துரத்திய நாயிடமிருந்து தப்பியோடிய மானானது வேடனிடம் அகப்பட்டுக்கொண்...