Posts

கலித்தொகைப் பாடல்கள் 19

  ரசனைக் குறிப்புகள்: 19 சுடருள் இருள் தோன்றியற்று   யானைத் தந்த உலக்கையால் சேம்பின் இலையைச் சுளகாகக் கொண்டு மூங்கில் நெல்லை கல்லுரலுள் போட்டு குற்றியபடி நாம் நெல்லு குற்றும் பாட்டு பாடுவோம் தோழி, வா.   நள்ளிரவு; இடி இடிக்கிறது; மழை பெய்கிறது; மின்னல் அடிக்கிறது. யானைகள் தம் இணைகளோடு வந்து வயலில் இறங்கிய சத்தம் கேட்ட கானவன் ஆசினி மரத்தின் உச்சிப் பரணுக்கு ஏறுவான்; கவணில் கல் தொடுத்து அங்கிருந்து எறிவான்; அது விசையாய்ச் சென்று வேங்கை மரப் பூக்களை உதிர்த்து மேலே பாயும்; வழியில் தேன் கூட்டைத் துளைக்கும்; அப்பால் வாழை மடலைக் கிழித்துக்கொண்டு போய் பலாப் பழத்துள் தங்கும்; அவ்வாறான மழைநாட்டையே பாடுவோம், தலைவி, வா!   அருவி இருக்கின்றதா, அருவியும் இருக்கின்றதா, வான்மழையில் பொங்கிவரும் அருவியும் இருக்கின்றதா, தான் அளித்த சத்தியம் பேணாது பொய்த்தான் மலையில்?   பொய்த்தற்கு உரியவனா, பொய்த்தற்கு உரியவனா, அஞ்சேலென்று அபயமளித்த அவன் பொய்த்தற்கு உரியவனா? அவ்வாறு அவன் பொய்ப்பவனாக இருந்தால் அது ...

கலித்தொகைப் பாடல்கள் 18

  ரசனைக் குறிப்புகள் 18 நின் கண்ணால் காண்பென்!   நீராடலை விரும்பி யாறு சென்ற தலைவி நீரின் வேகத்தில் அஞ்சி, தளர்ந்து, கண்கள் சொருகி நீரால் இழுப்புண்டு செல்லப்படலானாள்.   அப்போது அங்கே வந்த புன்னை மலர் மாலை சூடிய தலைவன் அது கண்டிரங்கி நீரிலே பாய்ந்து தன் நெஞ்சோடு சேர்த்து அவளைப் பற்றிக் கரைசேர்த்தான்.   அச் சமயம் அவனது அகன்ற மார்பில் அவளது முலைகள் அழுந்திப்போயின. அதனால் தன் கற்புக்குப் பங்கமின்றி அவனையே நம் தலைவி விரும்புதல் செய்துவிட்டாள்.   அவனும்தான் யார்? தினைப் புனத்திலே எழுப்பும் அகிற்புகையானது மேலே சென்று நிலவின் தோற்றத்தை மங்கச் செய்ய, அதை தேன்கூடுவென நினைத்து ஏணி எடுத்துவைக்கும் அகன்ற வளமான காட்டினையுடைய மலைநாட்டுத் தலைவனின் மகனேயாவான்.   வீட்டாரே! வீட்டாரே! ஒன்று ஞாபகம் வைத்திருங்கள். மலை வாழ்நர் அல்லவை செய்தொழுகினால் வள்ளிக் கொடியில் கிழங்கு வீழாது; மலையிலே தேனீக்கள் கூடு கட்டா; தினையிலே கதிர்கள் வளமாகப் பெருகா.   பேரழகுகொண்ட மலைக் கன்னியர் எப்போதும் தம...

கலித்தொகைப் பாடல்கள்..... 17

    (பாலைத் திணையை அடுத்து வருவது குறிஞ்சித் திணை. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்கள் உள. இவற்றில் குறிஞ்சிப் பாடல்கள் 29. இவற்றை கபிலர் பாடியுள்ளார். குறிஞ்சித் திணையானது புணர்தல் ஒழுக்கத்தைக் கொண்டது. மலைப் புறமும் நீரும் அதனாலாகும் காவும், தினைப் புனமும் எல்லாம் கூடலுக்கு வசதியாக இருத்தலில் மக்களின் வாழ்வு அப்படித்தாகி புணர்தலொழுக்கத்தைக் குறிஞ்சி நிலத்துக்கு ஆக்கினர் ஆன்றோர். குறிஞ்சித் திணைப் பாடல்களில், ஏனைய திணைப் பாடல்களைவிட, நாடகப் பாங்கான உரையாடல்கள் அதிகமிருக்கின்றன. அது, கற்போருக்கு மிகுந்த இனிமை செய்யும்.)     ரசனைக் குறிப்புகள் 17 ஓர் நாணின்மை செய்தேன்   தோழீ, ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்பாயாக. வில்லேந்திய ஒருவன் மிருகத்தின் அடியைத் தொடர்பவன்போல வந்து என்னை நோக்கி நிற்பான்; குறிப்பினில் தானுற்ற எண்ணம் காட்டுவானேயன்றி, வார்த்தையேதும் கூறாமல் திரும்புவான். இவ்வாறு பல நாட்கள் நடந்தன. எண்ணியெண்ணி தூக்கமிழந்துபோனேன். எவ்வித உறவுமில்லாத அவன்மீது எனக்கு பரிதாபமுண்டாயிற்று. அவனோ நேரே நின்று பார்த்து ...

கலித்தொகைப் பாடல்கள்... 16

    ரசனைக் குறிப்புகள் 16 வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே!   பலராமனது தோளிலுள்ள மாலைபோல் வெண்கடம்ப மரத்திலுள்ள மயில் அழகாக ஆடிக்கொண்டிருக்கிறது. நரம்பு முறுக்கிக் கட்டப்பட்ட யாழ்போல் தேனுண்ணும் வண்டுகளும் தும்பிகளும் ஆர்த்துக்கொண்டிருக்கின்றன. தோட்டத்தில் பூத்த மலர்களில் தேர்ந்து தேனுண்ண சுரும்புகளை ‘வா… வா!’வென பூங்கொம்பர்கள் அழைக்கின்றன. குயில்களும் ஆங்காங்கிருந்து கூவுகின்றன. எங்கும் ‘ம்’மென்ற இசையொலிப்பு. இவ்வாறாக காமன் விழாக் கொண்டாடும் வேளையுள்ள இளவேனில் வந்தது. ஆனால் காதலர் வரவில்லையேடி!   சிறிது சிறிதாக என் நுதல் முழுவதும் பசந்தது. சிறிது சிறிதாக என் தோள்களும் மெலிந்தன. சாரல் வீசும் காலமெனக் கண்டு என் கண்களும் வெய்ய நீர் உகுத்தன. மலை கடந்து சென்றவர் வரவை எதிர்பார்த்தேங்கிய என் நெஞ்சு முலைகளிடை தீயாய்க் கனன்றெழுகிறது.   காதலையே மறந்தாரா? ஒரு தூதனுப்பவும் நினைக்கவில்லையே! இவ்வாறான அடுக்கடுக்கான சோகங்களால் அவர் வரும்வரையாவது நான் உயிருடன் இருப்பது கூடுமா? எதுதான் நடக்கப் போ...

கலித்தொகைப் பாடல்கள்... 15

    ரசனைக் குறிப்புகள் 15 எண்ணிய நாள் வரையிறவாது புகுதந்தார்     மக்களெல்லாரும் சிறப்புற வாழும்படி ஒருபோது நிலமெங்கும் செழிக்க பாய்ந்துகொண்டிருந்த யாறு, அடிமணல் தெரியும்படி வற்றத் தொடங்கிவிட்டது.   தாம் தாழ்ந்திருந்த காலத்தில் தமக்குதவி செய்தார் தாழ்ந்தபோது, முன்சென்று உதவும் உயர் குணத்தார்போல, யாறு வறண்டபோதும் நீருண்ட கரை நிலப் பூமரங்கள் பூத்துப் பொலிந்து அழகை உதவியாய்ப் பகிர்கின்றன.   இளவேனில் முழுதுமாய்ப் பிறந்துவிட்டது. காஞ்சி மலரின் மகரந்த மணி குளித்த கருங்குயில் காவில் கூவுகிறது. இளவேனில் வந்துவிட்டதை மீளமீள எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இருந்தும் என் காதலர் செய்து சென்ற தீமை மறந்து என்னால் அப்போதும் இருக்க முடியும். ஆனால் பொய்ச்சாட்சி சொன்னவன் கீழே வர வாடிவிடும் உணர்மரம்போல் என் நெஞ்சில் மூண்டெழும் காதல் கனலானது என்னழகை வாட்டி தன்னிருப்பைக் காட்டிவிடுகிறதே, நான் என்ன செய்வேன்?   பூக்களின் பாரத்தால் தாழ்ந்திருக்கும் பூங்கொம்பில் வண்டினம் வந்து மொய்த்து மேலும்...