கலித்தொகை பாடல்கள்... 25
ரசனைக் குறிப்புகள்: 25 என்னைப் பித்தேறச் செய்தான் கொடிப் பூவும் கோட்டுப் பூவும் நீரின்றிக் காய்ந்து போனதில் பொன்னினால் செய்த பூவாத பூக்களை மாலையாக்கி அணிந்தவளும், வளையல் செறிந்த முன்கைகளைக் கொண்டவளும், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுமான பெண்ணே, உன் காலடியில் வந்து விழுந்திருந்தும் கருணையின்றி விலகிச் செல்லல் நியாயம்தானா? என்று சொல்லி கஸ்தூரி வாசம்வீசும் என் கருங்கூந்தலை கொள்ளப் பற்றி அதை விரல்களிலே சுற்றிக்கொண்டு முகரச் செய்தான்; பின் நறவம்பூ மலர்ந்ததுபோன்ற என் விரல்களைப் பிடித்துக்கொண்டு கோபமில்லாமலே சிவந்த தன் கண் மறைத்தபடி ஊதுலைபோல் மூச்சுவிடச் செய்தான்; தொய்யில் எழுதிய என் சின்ன முலைகளைத் தடவியபடி பிடியினைத் தழுவும் களிறுபோல் தன் பெரிய கைகளினால் அவன் மூர்க்கமாய்த் தழுவியதில் என் உணர்ச்சிகளை உச்சமேறச் செய்தான்; அதனால் என் உடம்பில் கொதித்திருந்த காமமும் அவனால் அடங்கியதாயிற்று. எனவே என் திருமணத்தை தோழி செவிலிக்குரைத்தல், செவிலி நற்றாய்க் குரைத்தல், நற்றாய் தந்தை தனையர்க்குரைத்தல் என்ற மரபுப்படி என் ...