கலித்தொகைப் பாடல்கள் 19
ரசனைக் குறிப்புகள்: 19 சுடருள் இருள் தோன்றியற்று யானைத் தந்த உலக்கையால் சேம்பின் இலையைச் சுளகாகக் கொண்டு மூங்கில் நெல்லை கல்லுரலுள் போட்டு குற்றியபடி நாம் நெல்லு குற்றும் பாட்டு பாடுவோம் தோழி, வா. நள்ளிரவு; இடி இடிக்கிறது; மழை பெய்கிறது; மின்னல் அடிக்கிறது. யானைகள் தம் இணைகளோடு வந்து வயலில் இறங்கிய சத்தம் கேட்ட கானவன் ஆசினி மரத்தின் உச்சிப் பரணுக்கு ஏறுவான்; கவணில் கல் தொடுத்து அங்கிருந்து எறிவான்; அது விசையாய்ச் சென்று வேங்கை மரப் பூக்களை உதிர்த்து மேலே பாயும்; வழியில் தேன் கூட்டைத் துளைக்கும்; அப்பால் வாழை மடலைக் கிழித்துக்கொண்டு போய் பலாப் பழத்துள் தங்கும்; அவ்வாறான மழைநாட்டையே பாடுவோம், தலைவி, வா! அருவி இருக்கின்றதா, அருவியும் இருக்கின்றதா, வான்மழையில் பொங்கிவரும் அருவியும் இருக்கின்றதா, தான் அளித்த சத்தியம் பேணாது பொய்த்தான் மலையில்? பொய்த்தற்கு உரியவனா, பொய்த்தற்கு உரியவனா, அஞ்சேலென்று அபயமளித்த அவன் பொய்த்தற்கு உரியவனா? அவ்வாறு அவன் பொய்ப்பவனாக இருந்தால் அது ...