கலித்தொகைப் பாடல்கள்... 29
ரசனைக் குறிப்புகள்: 29 வாரணவாசிப் பதம் கொண்டாயோ? (வாரணவாசிப் பதம் என்பது, பிறர் துன்பத்தையும் தன் துன்பமாய் உணர்தல்.) வெள்ளென்று தெரியும்படி தேமல் படர்ந்த அடியகன்ற அழகிய முலைகளும், சுருக்கற்று இளமையின் வீறுடன் மிளிரும் நெற்றியும், வாசம் வீசும் மாலையணிந்த அடர்ந்த கருங் கூந்தலும், படர்ந்திருக்கும் ஒளிர் தேமல்கொண்ட மேனியும், ஒயிலாய் வளைந்த முன்கைகளும், மடிப்புள்ள அடிவயிறும் கொண்டவளே! கண் நிறைந்த அழகியலாரைக் கண்டவரில் காமநோய் எழுந்து படரும்படியும் உயிரைமட்டும் எஞ்ச விட்டுப் போதலும் பெண்தன்மையல்ல என்றுகூறி ஒருவன் வணங்கினான்; கண்ணில் நீர் ததும்ப நின்று நடுங்கினான்; போர் யானைபோன்ற தன் தகைமையெல்லாம் அழிந்து உள்ளே உடைந்துவிட்டான்போலும், தலைவீ, அவன்! இவற்றுக்கெல்லாம் ஏது காரணமாய் இருக்கும்? தெருவிலே இதுமாதிரி பலர் காரணமின்றிக் கலங்கி நிற்பார்கள். அவர்கள் படும் துயரை நீ உன்னதாக வாரணாசிப் பதம் பெற்றவள்போல் உணரவேண்டியதில்லையெனவே என்னால் சொல்லமுடியும், தோழீ, இது குறித்து. மொட்டுப்போன்ற முலைகளில் தவழும்படி தேர்...