Posts

கலித்தொகைப் பாடல்கள் 21

  ரசனைக் குறிப்புகள் 21 குறியிடம் வரச் சொல்   ஏது இதுவென்று எனக்குத் தெரியவில்லை, தோழி. என்னிடம் எதையோ இரக்கப் போவதுபோல் மிகப் பணிவாக வந்து பேசுகிறான் ஒருவன். உலகைக் காக்கும் உரம் கொண்டான்போல் தோற்றத்தில் காணப்படுகிறான். அறிவுள்ளோரை வணங்கிக் கற்றதனால் அறிவு கொண்ட நல்லவர்களின் அடக்கம் அவனிடம் காணப்படுகிறது. துன்பப்பட்டோரின் துயர் தவிர்க்கும் வன்மை உடையவனாகவும் தெரிகிறான். இருந்தும் தன் பீடு பெருமையெல்லாம் துறந்து என்னிடம் என்னென்னவோ பேசினான். ‘நீயின்றி நான் உயிர் தரியேன்’ என்றான் ஒருபொழுது. அம்மாதிரிப் பேச்சை எவராலும் நம்புவது கடினமல்லவா? ‘நான் உன்னால் எவ்வளவு துயர்ப்படுகிறேனென நீ அறியாய்’ என்றும் சொன்னான். தன் வலையில் வீழ்ந்தவரிடமெல்லாம் இவன் இப்படித்தான் பேசியிருப்பானா? ‘நீ விலகிப் போனால் வாழமாட்டேன்’ என்றான் பிறகு. இவன் பேச்சை நம்பினால் எல்லாரும் என்னை அறிவில்லாதவள் என்றல்லவா பழிப்பார்கள்? என்ன செய்வது என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லையே! எதையும் செய்வதன் முன்பாக, தோழி, அதுபற்றி நாம் சேர்ந்து பேசிக்கொள்வோம். அதற்கு தோழி சொல்கிறா...

கலித்தொகைப் பாடல்கள் 20

  ரசனைக் குறிப்புகள் 20   நட்டார்க்குத் தோற்றலை நாணாதவன்   வெறிகொண்டு வேங்கையொன்றினைக் கொன்ற புள்ளித் தோல் யானையின் தந்தத்தினாலும்,இளவண்டு மொய்த்துத் திரியும் சந்தன மரத்தினாலும் ஆன உலக்கைகளை எடுத்துக்கொண்டு, கல்லுரலுள் நெல்லைப் போட்டு, வா, தோழி, குற்றத் தொடங்குவோம். அப்போது கடவுளை ஏற்றிப் போற்றுவதுபோல் தலைவனைப் புகழ்ந்து பாடுவோம். கூற்றுவன் பகையோடு எதிர்வந்தாலும் புறமுதுகிடாதவன் மலையிலே, பெண்களின் விரலணிபோல் காந்தள் முகையிலே தும்பிகள் மொய்த்திருக்கும். தன் நண்பர்களாயின் அவர்களுக்கு அன்பால் தோற்கவும் பின்னிற்காதவன். இருளடைந்த மலைப் பகுதியிலே வருடை மான் குட்டியொன்று ஓடித் திரிவதைக் கண்ட கருங்குரங்கு அச்சத்துடன் பார்க்கும் காட்சிகள் கொண்டது அவனது மலை.   தோற்றுப் பின்வாங்கும் எதிரிகளைக்கூட இகழாத இயல்பினன் அவன். பட்டையானது முதிர்ந்ததும் இயல்பில் கழன்றுவிடும் மூங்கில் மரங்களைக் கொண்டது அவனது மலை.   புலியின் பாதங்களைப்போன்ற காய்களைக்கொண்ட வாழைகள் நிறைந்தது அவனது மலை. அவனோ வறுமைத் துயரடைந்த விதம் சொன்னோரின் குறை தீர்க்க முடியாவிட்டால் தன்னுயி...

கலித்தொகைப் பாடல்கள் 19

  ரசனைக் குறிப்புகள்: 19 சுடருள் இருள் தோன்றியற்று   யானைத் தந்த உலக்கையால் சேம்பின் இலையைச் சுளகாகக் கொண்டு மூங்கில் நெல்லை கல்லுரலுள் போட்டு குற்றியபடி நாம் நெல்லு குற்றும் பாட்டு பாடுவோம் தோழி, வா.   நள்ளிரவு; இடி இடிக்கிறது; மழை பெய்கிறது; மின்னல் அடிக்கிறது. யானைகள் தம் இணைகளோடு வந்து வயலில் இறங்கிய சத்தம் கேட்ட கானவன் ஆசினி மரத்தின் உச்சிப் பரணுக்கு ஏறுவான்; கவணில் கல் தொடுத்து அங்கிருந்து எறிவான்; அது விசையாய்ச் சென்று வேங்கை மரப் பூக்களை உதிர்த்து மேலே பாயும்; வழியில் தேன் கூட்டைத் துளைக்கும்; அப்பால் வாழை மடலைக் கிழித்துக்கொண்டு போய் பலாப் பழத்துள் தங்கும்; அவ்வாறான மழைநாட்டையே பாடுவோம், தலைவி, வா!   அருவி இருக்கின்றதா, அருவியும் இருக்கின்றதா, வான்மழையில் பொங்கிவரும் அருவியும் இருக்கின்றதா, தான் அளித்த சத்தியம் பேணாது பொய்த்தான் மலையில்?   பொய்த்தற்கு உரியவனா, பொய்த்தற்கு உரியவனா, அஞ்சேலென்று அபயமளித்த அவன் பொய்த்தற்கு உரியவனா? அவ்வாறு அவன் பொய்ப்பவனாக இருந்தால் அது ...

கலித்தொகைப் பாடல்கள் 18

  ரசனைக் குறிப்புகள்- 18 குறிஞ்சி 3  நின் கண்ணால் காண்பென்!   நீராடலை விரும்பி யாறு சென்ற தலைவி நீரின் வேகத்தில் அஞ்சி, தளர்ந்து, கண்கள் சொருகி நீரால் இழுப்புண்டு செல்லப்படலானாள்.   அப்போது அங்கே வந்த புன்னை மலர் மாலை சூடிய தலைவன் அது கண்டிரங்கி நீரிலே பாய்ந்து தன் நெஞ்சோடு சேர்த்து அவளைப் பற்றிக் கரைசேர்த்தான்.   அச் சமயம் அவனது அகன்ற மார்பில் அவளது முலைகள் அழுந்திப்போயின. அதனால் தன் கற்புக்குப் பங்கமின்றி அவனையே நம் தலைவி விரும்புதல் செய்துவிட்டாள்.   அவனும்தான் யார்? தினைப் புனத்திலே எழுப்பும் அகிற்புகையானது மேலே சென்று நிலவின் தோற்றத்தை மங்கச் செய்ய, அதை தேன்கூடுவென நினைத்து ஏணி எடுத்துவைக்கும் அகன்ற வளமான காட்டினையுடைய மலைநாட்டுத் தலைவனின் மகனேயாவான்.   வீட்டாரே! வீட்டாரே! ஒன்று ஞாபகம் வைத்திருங்கள். மலை வாழ்நர் அல்லவை செய்தொழுகினால் வள்ளிக் கொடியில் கிழங்கு வீழாது; மலையிலே தேனீக்கள் கூடு கட்டா; தினையிலே கதிர்கள் வளமாகப் பெருகா.   பேரழகுகொண்ட மலைக் கன்னி...

கலித்தொகைப் பாடல்கள்..... 17

    (பாலைத் திணையை அடுத்து வருவது குறிஞ்சித் திணை. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்கள் உள. இவற்றில் குறிஞ்சிப் பாடல்கள் 29. இவற்றை கபிலர் பாடியுள்ளார். குறிஞ்சித் திணையானது புணர்தல் ஒழுக்கத்தைக் கொண்டது. மலைப் புறமும் நீரும் அதனாலாகும் காவும், தினைப் புனமும் எல்லாம் கூடலுக்கு வசதியாக இருத்தலில் மக்களின் வாழ்வு அப்படித்தாகி புணர்தலொழுக்கத்தைக் குறிஞ்சி நிலத்துக்கு ஆக்கினர் ஆன்றோர். குறிஞ்சித் திணைப் பாடல்களில், ஏனைய திணைப் பாடல்களைவிட, நாடகப் பாங்கான உரையாடல்கள் அதிகமிருக்கின்றன. அது, கற்போருக்கு மிகுந்த இனிமை செய்யும்.)     ரசனைக் குறிப்புகள் 17 ஓர் நாணின்மை செய்தேன்   தோழீ, ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்பாயாக. வில்லேந்திய ஒருவன் மிருகத்தின் அடியைத் தொடர்பவன்போல வந்து என்னை நோக்கி நிற்பான்; குறிப்பினில் தானுற்ற எண்ணம் காட்டுவானேயன்றி, வார்த்தையேதும் கூறாமல் திரும்புவான். இவ்வாறு பல நாட்கள் நடந்தன. எண்ணியெண்ணி தூக்கமிழந்துபோனேன். எவ்வித உறவுமில்லாத அவன்மீது எனக்கு பரிதாபமுண்டாயிற்று. அவனோ நேரே நின்று பார்த்து ...

கலித்தொகைப் பாடல்கள்... 16

    ரசனைக் குறிப்புகள் 16 வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே!   பலராமனது தோளிலுள்ள மாலைபோல் வெண்கடம்ப மரத்திலுள்ள மயில் அழகாக ஆடிக்கொண்டிருக்கிறது. நரம்பு முறுக்கிக் கட்டப்பட்ட யாழ்போல் தேனுண்ணும் வண்டுகளும் தும்பிகளும் ஆர்த்துக்கொண்டிருக்கின்றன. தோட்டத்தில் பூத்த மலர்களில் தேர்ந்து தேனுண்ண சுரும்புகளை ‘வா… வா!’வென பூங்கொம்பர்கள் அழைக்கின்றன. குயில்களும் ஆங்காங்கிருந்து கூவுகின்றன. எங்கும் ‘ம்’மென்ற இசையொலிப்பு. இவ்வாறாக காமன் விழாக் கொண்டாடும் வேளையுள்ள இளவேனில் வந்தது. ஆனால் காதலர் வரவில்லையேடி!   சிறிது சிறிதாக என் நுதல் முழுவதும் பசந்தது. சிறிது சிறிதாக என் தோள்களும் மெலிந்தன. சாரல் வீசும் காலமெனக் கண்டு என் கண்களும் வெய்ய நீர் உகுத்தன. மலை கடந்து சென்றவர் வரவை எதிர்பார்த்தேங்கிய என் நெஞ்சு முலைகளிடை தீயாய்க் கனன்றெழுகிறது.   காதலையே மறந்தாரா? ஒரு தூதனுப்பவும் நினைக்கவில்லையே! இவ்வாறான அடுக்கடுக்கான சோகங்களால் அவர் வரும்வரையாவது நான் உயிருடன் இருப்பது கூடுமா? எதுதான் நடக்கப் போ...