கலித்தொகைப் பாடல்கள்.... 14
ரசனைக் குறிப்புகள் 14 தாம் சொல்லிய பொய்யன்றி புகுதந்தார் பாய்ந்து வரும் ஆற்றுநீர் கால்வாய்களில் ஓடி வறண்டிருந்த இடங்களை அழகுபெற வைத்திருக்கிறது. குளங்களுக்கு நீரடித்துப் பாய்ந்த அயலிலே வரிவரியாய் நுண்மணல் திரண்டிருக்கிறது. அதை மூடி உதிர்ந்து கிடக்கின்றன ஈங்கை மரப் பூக்கள். காதலர்ப் பிரிந்தவர் நெற்றி நிறத்தில் பீர்க்குகளும் பூத்துவிட்டன. புணர்ந்தவர் முகம்போல பொலிந்திருக்கின்றன பொய்கையில் பூக்கள். உடம்பை நடுக்கும் பனியோடு வாடையும் சேர்ந்து என்னைக் கலங்கச் செய்கின்றது. அன்றொரு நாள் புணர்ச்சிவேளையின் உச்சத்தில் பிரியேனென்று ஒரு வார்த்தை சொன்னார். நாடு வென்று வெல்புகழ் வீரராய் யானைமேல் ஏறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெல்லாம் என்னை உயிர் தின்னாமல் வைத்திருக்குமா? தன் நிறை கதிர்களை வீசி நிலா எறிக்கிறது. வாடைக்காற்றும் குளிரோடு சேர்ந்து கடுகி வீசுகிறது. படை வென்று வெற்றி வீரராய் குதிரையேறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெ...