கலித்தொகைப் பாடல்கள்..... 17
(பாலைத் திணையை அடுத்து வருவது குறிஞ்சித் திணை. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து உட்பட 150 பாடல்கள் உள. இவற்றில் குறிஞ்சிப் பாடல்கள் 29. இவற்றை கபிலர் பாடியுள்ளார். குறிஞ்சித் திணையானது புணர்தல் ஒழுக்கத்தைக் கொண்டது. மலைப் புறமும் நீரும் அதனாலாகும் காவும், தினைப் புனமும் எல்லாம் கூடலுக்கு வசதியாக இருத்தலில் மக்களின் வாழ்வு அப்படித்தாகி புணர்தலொழுக்கத்தைக் குறிஞ்சி நிலத்துக்கு ஆக்கினர் ஆன்றோர். குறிஞ்சித் திணைப் பாடல்களில், ஏனைய திணைப் பாடல்களைவிட, நாடகப் பாங்கான உரையாடல்கள் அதிகமிருக்கின்றன. அது, கற்போருக்கு மிகுந்த இனிமை செய்யும்.) ரசனைக் குறிப்புகள் 17 ஓர் நாணின்மை செய்தேன் தோழீ, ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்பாயாக. வில்லேந்திய ஒருவன் மிருகத்தின் அடியைத் தொடர்பவன்போல வந்து என்னை நோக்கி நிற்பான்; குறிப்பினில் தானுற்ற எண்ணம் காட்டுவானேயன்றி, வார்த்தையேதும் கூறாமல் திரும்புவான். இவ்வாறு பல நாட்கள் நடந்தன. எண்ணியெண்ணி தூக்கமிழந்துபோனேன். எவ்வித உறவுமில்லாத அவன்மீது எனக்கு பரிதாபமுண்டாயிற்று. அவனோ நேரே நின்று பார்த்து ...