Posts

கலித்தொகைப் பாடல்கள் 27

  ரசனைக் குறிப்புகள்: 27   அரசனின் தவறுதான்   ஊரின் சோலைக்கண் வாய்க்காலோரமாய் உள்ளது கொன்றை மரம். அதன் பூக்கொண்டு கட்டிய சரத்தினால் அதுவும் கூந்தலும் ஒன்றாகும்படி அணிசெய்து விட்டிருக்கிறார்கள் வீட்டிலே. அந்தப் பூமாலையும் கூந்தலுமோவெனின் அவளது தோளில் தொங்கிக் கிடக்கின்றன. கருங்கூந்தல் கவிந்ததனால்போலும் அவள் முகம் மேலும் மேலுமாய்ச் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வருபவள் எவளாயிருப்பாள்? ஒருவேளை சிறந்த கலைஞன் ஒருவன் தன் கைவண்ணத்தில் தைத்துருவாக்கிய பாவையோ அது? சிறப்புகள் கொண்ட அவயவங்கள் தேடி படைக்கப்பட்ட ஒரு பெண்ணாயிருக்கலாமோ? ஆடவர்மேற்கொண்ட வெறுப்பினால் யாரோ கொண்ட அணங்கின் வடிவமோ அது? இப்படியானவளை ஏன் இவ்வாறு காவலின்றி விட்டிருக்கிறார்கள்? ஒருவேளை, செல்வமுள்ள பெற்றோர்க்கு அருமையாய்க் கிடைத்த ஒரு செல்ல மகளோ இவள்? இவளோடு கதையாடி இவள்பற்றி நான் அறிந்து வரப்போகிறேன்.   ‘அன்னம்போல் சாயலும், மயில்போல் ஒயிலும், புறவுபோல் திட்பமும், மான்போல் மருட்சியும் கொண்ட பேரழகியே! இவையெல்லாம் உனைக் கண்டாரைப் பேத...

கலித்தொகைப் பாடல்கள் 26

  ரசனைக் குறிப்புகள்: 26 என்னைப் பித்தேறச் செய்தான்   கொடிப் பூவும் கோட்டுப் பூவும் நீரின்றிக் காய்ந்து போனதில் பொன்னினால் செய்த பூவாத பூக்களை மாலையாக்கி அணிந்தவளும், வளையல் செறிந்த முன்கைகளைக் கொண்டவளும், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுமான பெண்ணே, உன் காலடியில் வந்து விழுந்திருந்தும் கருணையின்றி விலகிச் செல்லல் நியாயம்தானா? என்று சொல்லி கஸ்தூரி வாசம்வீசும் என் கருங்கூந்தலை கொள்ளப் பற்றி அதை விரல்களிலே சுற்றிக்கொண்டு முகரச் செய்தான்; பின் நறவம்பூ மலர்ந்ததுபோன்ற என் விரல்களைப் பிடித்துக்கொண்டு கோபமில்லாமலே சிவந்த தன் கண் மறைத்தபடி ஊதுலைபோல் மூச்சுவிடச் செய்தான்; தொய்யில் எழுதிய என் சின்ன முலைகளைத் தடவியபடி பிடியினைத் தழுவும் களிறுபோல் தன் பெரிய கைகளினால் அவன் மூர்க்கமாய்த் தழுவியதில் என் உணர்ச்சிகளை உச்சமேறச் செய்தான்; அதனால் என் உடம்பில் கொதித்திருந்த காமமும் அவனால் அடங்கியதாயிற்று. எனவே என் திருமணத்தை தோழி செவிலிக்குரைத்தல், செவிலி நற்றாய்க் குரைத்தல், நற்றாய் தந்தை தனையர்க்குரைத்தல் என்ற மரபுப்படி என் ...

கலித்தொகை பாடல்கள்... 25

  ரசனைக் குறிப்புகள்: 25 என்னைப் பித்தேறச் செய்தான்   கொடிப் பூவும் கோட்டுப் பூவும் நீரின்றிக் காய்ந்து போனதில் பொன்னினால் செய்த பூவாத பூக்களை மாலையாக்கி அணிந்தவளும், வளையல் செறிந்த முன்கைகளைக் கொண்டவளும், மூங்கிலை ஒத்த தோள்களை உடையவளுமான பெண்ணே, உன் காலடியில் வந்து விழுந்திருந்தும் கருணையின்றி விலகிச் செல்லல் நியாயம்தானா? என்று சொல்லி கஸ்தூரி வாசம்வீசும் என் கருங்கூந்தலை கொள்ளப் பற்றி அதை விரல்களிலே சுற்றிக்கொண்டு முகரச் செய்தான்; பின் நறவம்பூ மலர்ந்ததுபோன்ற என் விரல்களைப் பிடித்துக்கொண்டு கோபமில்லாமலே சிவந்த தன் கண் மறைத்தபடி ஊதுலைபோல் மூச்சுவிடச் செய்தான்; தொய்யில் எழுதிய என் சின்ன முலைகளைத் தடவியபடி பிடியினைத் தழுவும் களிறுபோல் தன் பெரிய கைகளினால் அவன் மூர்க்கமாய்த் தழுவியதில் என் உணர்ச்சிகளை உச்சமேறச் செய்தான்; அதனால் என் உடம்பில் கொதித்திருந்த காமமும் அவனால் அடங்கியதாயிற்று. எனவே என் திருமணத்தை தோழி செவிலிக்குரைத்தல், செவிலி நற்றாய்க் குரைத்தல், நற்றாய் தந்தை தனையர்க்குரைத்தல் என்ற மரபுப்படி என் ...

கலித்தொகைப் பாடல்கள் 24

  ரசனைக் குறிப்புகள்: 24   இவளின்றி நான் வாழேன்!   முறம்போன்ற செவியின் மறைப்பிடமாய் பாய்ந்து தாக்கிய புலிய, அறமல்லாதன செய்த துரியோதனனின் தொடையைத் தாக்கி பீமசேனன் கொன்றதுபோல் அதன் தொடையைத் தன் தந்தங்களால் குத்திக் கொன்ற யானையானது, மல்லர்களை வென்ற திருமால்போல் தன் சுற்றத்துள் பெருமிதமாய் நடந்து திரியும் நாடனே, இதைக் கேள்:   மாலை சூடிய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு தாமரை மலர் மாலை அணிந்து தண்ணறும் சாந்து மார்பில் பூசி நீ வரின், மணம் வீச மலை வழியில் நின்று பலியெடுக்கும் அணங்கு என மலை வாழ்நர் உன்னை எண்ணிவிடுவர்.   தொங்கும்படியான கூந்தலுள்ள என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு ஈர ஆடையோடும் இருட்டிலேயும் நீ வரின் தீப்பந்தம் ஏந்துவோர், கவண் எறிவோர், அம்பெய்வோராகிய தினைப் புனக் காவலர் உன்னைக் களிறென்று ஆர்ப்பரிப்பர்.   அகன்ற அடிவயிற்றையுடைய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு அவள்மீது அன்புகொண்டவனும் மலைநாட்டுத் தலைவனுமாகிய நீ வரின் புலியென ஊர் உன்னை எண்ணிவிடும். அவ்வாறு விலங்கென எண்ணாது உண்ம...

கலித்தொகை பாடல்கள் 23

  ரசனைக் குறிப்புகள்: 23 கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான்!   கையில் சுடர்கொண்ட வளைகள் அணிந்தவளே, கேட்பாயாக. மண்வீடு கட்டி விளையாடிய காலத்தில் அதை ஓடிவந்து காலாற் சிதைத்தும், நம் தலையிலுள்ள மாலையை அறுத்தும், விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு ஓடியும் நம்மை வருத்திய சின்ன வம்பன், அன்றொருநாள் அன்னையும் நானும் இருந்தபொழுதில், ‘வீட்டுக்காரரே! வீட்டுக்காரரே!’ என அழைத்து தனக்குத் தாகமாக இருக்கிறதென்றும் தண்ணீர் கொஞ்சம் தரும்படியும் கேட்டான். அதற்கு அன்னை எனை நோக்கி, பொற்பாத்திரமெடுத்து நீர் கொடுத்துவரச் சொன்னாள். நானும் எதையும் யோசியாது சென்று நீரைப் பாத்திரத்திலெடுத்து கொடுக்கும்வேளையிலே அவன் என் முன்கையைப் பற்றியிழுத்தான். நானும் பயந்துபோய், ‘அம்மா, இவன் செய்வதைப் பா’ரெனக் கத்திவிட்டேன். அன்னை அலறிக்கொண்டு ஓடிவந்தாள். உடனே நான், ‘இவனுக்கு தண்ணீர் விக்கிவிட்டது’ என பொய் ஒன்று சொன்னேன். அன்னையும் அவனது கவனமின்மையைப் பரிவாகக் கண்டித்து அவனது முதுகை நீவிவிட்டாள். அந்தக் கள்வன் மகனோ, கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் ந...

கலித்தொகைப் பாடல்கள் 22

  ரசனைக் குறிப்புகள் 22 இரவில் வராதே ; பகலில் வா!   ‘தாக்கிய வரிப் புலியை வென்ற யானையானது மலையோரத்தில் வலியோடு தூங்குகையில் நனவிலே செய்த அப் புலிப் போர் அப்போதும் மனத்தில் இருந்ததால் அதைக் கனவிலும் கண்டு அது திடுக்கிட்டு எழுந்தது.   ‘எதிரே பூத்திருந்த வேங்கை மரத்தை நிஜப் புலியென நினைத்து அதை முருக்கி அழித்துச் சினம் தணிந்தது. பின் அம் மரத்தை காணும்பொழுதில் நிமிர்ந்து காண நாணித் தலைகவிழும் நாடனே’ என விளித்து தோழி சொல்கிறாள்:   மலர்போன்ற விழிகொண்ட இவள்மேல் நீ இவ்வளவு காதல் கொண்டுள்ளாய் என்பது அறிகையில் இனிமையான விஷயம்தான். ஆனால் இடியென்றும் மழையென்றும் பாராமல் மின்னலையே ஒளியாகக் கொள்ளும்படியான கடுவழியில் நீ வருவது துயர் தருவதாகும்.   இவளை இன்புறச் செய்யும் நீ இவள்மாட்டு இவ்வளவு அன்பு கொண்டுள்ளாய் என்பது அறிகையில் இனிமையான விஷயம்தான். ஆனால் மேகங்கள் தவழும் மலை அடுக்கத்தில் வாசனை தவழும் மார்போடு அணங்குகள் நடமாடும் வழியில் நீ வருவது துயர் தருவதாகும்.   இருள்போல் கருங்கூந்தல் கொண்ட இவளிடம் ...

கலித்தொகைப் பாடல்கள் 21

  ரசனைக் குறிப்புகள் 21 குறியிடம் வரச் சொல்   ஏது இதுவென்று எனக்குத் தெரியவில்லை, தோழி. என்னிடம் எதையோ இரக்கப் போவதுபோல் மிகப் பணிவாக வந்து பேசுகிறான் ஒருவன். உலகைக் காக்கும் உரம் கொண்டான்போல் தோற்றத்தில் காணப்படுகிறான். அறிவுள்ளோரை வணங்கிக் கற்றதனால் அறிவு கொண்ட நல்லவர்களின் அடக்கம் அவனிடம் காணப்படுகிறது. துன்பப்பட்டோரின் துயர் தவிர்க்கும் வன்மை உடையவனாகவும் தெரிகிறான். இருந்தும் தன் பீடு பெருமையெல்லாம் துறந்து என்னிடம் என்னென்னவோ பேசினான். ‘நீயின்றி நான் உயிர் தரியேன்’ என்றான் ஒருபொழுது. அம்மாதிரிப் பேச்சை எவராலும் நம்புவது கடினமல்லவா? ‘நான் உன்னால் எவ்வளவு துயர்ப்படுகிறேனென நீ அறியாய்’ என்றும் சொன்னான். தன் வலையில் வீழ்ந்தவரிடமெல்லாம் இவன் இப்படித்தான் பேசியிருப்பானா? ‘நீ விலகிப் போனால் வாழமாட்டேன்’ என்றான் பிறகு. இவன் பேச்சை நம்பினால் எல்லாரும் என்னை அறிவில்லாதவள் என்றல்லவா பழிப்பார்கள்? என்ன செய்வது என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லையே! எதையும் செய்வதன் முன்பாக, தோழி, அதுபற்றி நாம் சேர்ந்து பேசிக்கொள்வோம். அதற்கு தோழி சொல்கிறா...