Posts

கலித்தொகைப் பாடல்கள்.... 14

    ரசனைக் குறிப்புகள்   14 தாம் சொல்லிய பொய்யன்றி புகுதந்தார்   பாய்ந்து வரும் ஆற்றுநீர் கால்வாய்களில் ஓடி வறண்டிருந்த இடங்களை அழகுபெற வைத்திருக்கிறது. குளங்களுக்கு நீரடித்துப் பாய்ந்த அயலிலே வரிவரியாய் நுண்மணல் திரண்டிருக்கிறது. அதை மூடி உதிர்ந்து கிடக்கின்றன ஈங்கை மரப் பூக்கள். காதலர்ப் பிரிந்தவர் நெற்றி நிறத்தில் பீர்க்குகளும் பூத்துவிட்டன. புணர்ந்தவர் முகம்போல பொலிந்திருக்கின்றன பொய்கையில் பூக்கள். உடம்பை நடுக்கும் பனியோடு வாடையும் சேர்ந்து என்னைக் கலங்கச் செய்கின்றது. அன்றொரு நாள் புணர்ச்சிவேளையின் உச்சத்தில் பிரியேனென்று ஒரு வார்த்தை சொன்னார். நாடு வென்று   வெல்புகழ் வீரராய் யானைமேல் ஏறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெல்லாம் என்னை உயிர் தின்னாமல் வைத்திருக்குமா?   தன் நிறை கதிர்களை வீசி நிலா எறிக்கிறது. வாடைக்காற்றும் குளிரோடு சேர்ந்து கடுகி வீசுகிறது. படை வென்று வெற்றி வீரராய்       குதிரையேறி அவர் ஒருநாள் வரக்கூடும். அதுவரை இவையெ...

கலித்தொகைப் பாடல்கள்... 13

    கலித்தொகைப் பாடல்கள்: ரசனைக் குறிப்புகள் 13   (கலித்தொகைப் பாடல்கள் பேசும் பெரும்பாலான பிரிவானது பொருள்வயிற் பிரிவாகவே இருக்கிறது. சிலவே போர்வயிற் பிரிவைப் பேசுகின்றன. அவற்றுள் இது ஒன்று.) பலதேவனைப்போல் வெண்ணிறப் பூக்கள் குலுங்கித் துலங்கும் அரசமரம்; சூரியனைப்போல் விரிந்த பூக்களால் ஔி விரிக்கும் செருந்தி; காமனைப்போல் வண்டார்க்கும் பூக்களைக் கொண்ட காஞ்சி; அவன் தம்பி சோமன்போல் பூக் குலுங்கும் ஞாழல்; சிவன்போல் நிறை பூப் பூக்கம் இலவம்; இவையெல்லாமே நதிதீரத்து எழில் மரச் சோலையில் பூத்துப் பொலிந்துவிட்டன. இளவேனில் பிறந்துவிட்டது!   திசையெங்கும் பறந்து தேன்மாந்தி இன்புறும் வரிகொண்ட தும்பிகள் மலிந்த நாட்டில், அலைந்துழன்று அபலைகளாய் வருவோரைப் புரந்து வெற்றியின் புகழோடு வதிந்துகொண்டிருக்கும் தலைவரா, சிறந்த என் அழகெலாம் இங்கே வாடிக்கொண்டிருப்பதை நினக்கப்போகிறார்?   புகலடைய ஏற்ற இடமென்று தாமாகவே வந்து தஞ்சமாகியவரை தளராது தாங்கி அதனால் உலகு புகழ்கொண்டோராய் அந்நிய நாட்டில் உறையு...

கலித்தொகைக் பாடல்கள்... 12

  ரசனைக் குறிப்பகள்: 12   அஞ்சியது ஆங்கே அணங்காகும்      கேட்கும்போதே நடுக்கத்தையும் வெறுப்பையும் தந்த ‘நாம் அஞ்சுகிற எதுவோ அதுவே அணங்காகிற’தென்ற சொல் உண்மைதான் தோழி. சொல்கிறேன் கேள்:   என் அழகைப் பாராட்டி நாளும் புதிது புதிதாக அவர் சொல்லும்போது, இதில் ஏதோ இருக்கிறதென அப்போதே நான் நினைத்தேன்தான். ஆனாலும் பெரிதாக அதை எடுக்கவில்லை. அதை உண்மையாக்கிக் கொள்ள சம்பவம் நடந்திருக்கிறது.   வாசம் வீசும் படுக்கையில் படுத்துப் புணர்ந்த பின் என் ஆகத்தில் அவர் அயர்ந்து தூங்கினார். அப்போது, ‘கூர்மையான தந்தங்களையுடைய யானையானது தாகம்மேலிட்டு கானலைக் கண்டு அலமந்தோடும் வெஞ்சுரம் கடந்துசென்று யான் பொருளீட்டி வரும்வரை, தன் முன்னிறைக் கைகொண்ட வளையல்கள் கழலாமல், பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு என் மனையை நிர்வகிக்கும் வலிமை இவள் கொண்டிருக்கிறாளா?’ என பிதற்றினார்.   அதுவே அவர் எண்ணமானால், அவரின்றி நான் வாழும் உளவலிமை எனக்கு இல்லையென்பது உண்மையானால், அவள் மார்பே கதியென்று கிடந்தவர், இப்போத...

கலித்தொகைப் பாடல்களின்... 11

  ரசனைக் குறிப்புகள் 11 மடமான்போல் நின்னாங்கு வரும் என் நெஞ்சு   தினைப் புன விளைச்சலை யானை வந்தழிக்கிறபோது, கவண் வீசி அதைக் கலைப்பர் புனக் காவலர். அப்போது அக் கவண் கற்கள் பூமரங்களையும் தாக்கி அதன் கொம்பர்களை முறித்துப் போடும். அவ்வாறான மலையின் வழியானது வெப்ப மிகுதியால் கடத்தற்கரியதாய்ப் போயிருக்கும். அத்தகைய வழி கடந்து தனித்துச் செல்ல எண்ணியிருக்கிறாய் நீ. அப்போது நானிங்கே வாடியிருத்தல் தவிர்க்க முடியாததாகும். அது ஊராரின் நகைப்பிற்கே என்னை இடமாக்கும். அதன்மேல் நான் உண்பதும் வாழ்வதும் அர்த்தமற்றதாகிவிடும். சுவைத்த பின் ஒதுக்கிவிடப்பட்ட பெண்மேனி, நீருண்ட பின் வீசப்பட்ட பிளாவை ஒத்ததாகும். நலமெலாம் அனுபவித்துக் கைவிடப்பட்ட பெண்கள், வதிவோர் நீங்கிப் போன வெற்றூரை ஒத்தவராவர். சுகித்த பின் ஒதுக்கிவிடப்பட்ட பெண்கள், தலையிலிருந்து வீசப்பட்ட காய்ந்த பூச்சரம் ஒத்தவராவர். நானும் உன்னால் அன்னவர்போல் ஆகிவிட்டேன். பரவாயில்லை. கொலைவெறியோடு துரத்திய நாயிடமிருந்து தப்பியோடிய மானானது வேடனிடம் அகப்பட்டுக்கொண்...

கலித்தொகைப் பாடல்களின்.... 10

  ரசனைக் குறிப்பு:10   மகன் அல்லை   செம்மையான மொழிகளால் இனிமை கெழுமப் பேசி நீ என்னைப் புணர்ந்த அந்நாள், அவையெல்லாம் பொய்யானவை என்பதை நான் எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?   அந்தப் பொய்யை உறுதிப்படுத்தத்தான் இப் பெரிய ஊரெங்கும் என்னைப் பேசுபொருளாக்கிவிட்டு எரிக்கும் வெஞ்சுர வழி கடந்து நீ பொருள் தேடி வர புறப்படுகிறாய் போலும்!                                                            நீ மனிதனே இல்லை.   என்னவாவது செய்துகொள்.   ஆனால் அவ்வாறு சென்று நீ வினை செய்யும் காலத்தில், அவளன்பை எண்ணாமல் நான் கைவிட்டு   வந்தவள் எங்ஙனமுள்ளாளென அங்கு வரும் யாரையும்தான் கேட்டுவிடாதே.   அவ்வண்ணம் கேட்டால் எந்த நோக்கத்தில் சென்றா...

கலித்தொகைப் பாடல்களின்... 9

  ரசனைக் குறிப்புரை : 9 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை!   (பாலைக் கலியிலுள்ள பதினேழாம் பாடலிது. இதில் பன்னிரண்டு வரிகளுள. இதிலொரு முழுமை உளதெனினும், இதுவே முழுதான பாடலென்று நான் எண்ணவில்லை. இது, சிதைந்துபோன ஏட்டுப் பிரதியிலிருந்து பதிப்பாசிரியர் கண்டெடுத்த முழுமையாக இருக்கலாம். ஏனைய பாலைத் திணைப் பாடல்களிலிருந்து சொல்லும் முறையில் ஓர் அடாவடித்தனமானதும், எடுத்தெறிந்த வாழ்க்கைமுறையைக் கொண்டதுமான ஒரு இறுமாந்த புலவனின் கூற்றை இப் பாடலின் அர்த்த வெளிப்பாட்டில் நான் காண்கிறேன். அதனால் இது என் ரசனையின் பதிவாக இங்கே இருக்கிறது. இதில் நாடகப் பாங்கு எதுவுமில்லை. விஷயத்தை நேரடியாகக் கூறுகிற பாடலிது. இதுபோன் ற சங்கப் பாடல்களில் தோழி கூற்றாக ‘எம் தலைவர்’ / ‘எம் காதலர்’ என வருமிடங்களின் பொருத்தமின்மையை பல தடவைகளிலும் உணர்ந்து, யோசித்து வருந்தியிருக்கிறேன். தோழியோ தலைவியோ எம் தலைவரென / எம் காதலரென எவ்வாறு கூறுமுடியும்? தலைவி என் காதலர் / என் தலைவர் என்றும் தோழி உன் காதலர் / உன் தலைவர் எனவும் சொன்னால்தானே பொருத்தம்? இதுபற்றிய ஆய்வுரை ...

கலித்தொகைப் பாடல்களின்....8

  8. அறனோடி விலங்கின்று    (அறன் ஓடிச் சென்று விலக்கியது)   துயருற்றுத் தூக்கமற்ற கண்களில் நீர் சொரிந்துகொண்டிருக்கிறது; கவனிப்பற்றதால் அழகும் அழிந்துகொண்டிருக்கிறது; கைகள் மெலிந்துபோக வளையல்களும் கழன்றோடிவிட்டன. இவையெல்லாம் மறந்து பிரிந்தவர் நலம் மேலெழுந்து வருகையில், தோழி, என்னுள் ஓரெண்ணம் எழுகிறது, சொல்லட்டுமா?   நான் இவ்வண்ணம் துயருழக்கும்படி பிரிந்து சென்றிருந்தாலும் அவர் செல்லிட வழியிலுள்ள கொதி கல்மேல் மழை பெய்யும்படியாக, இசைக்கு இரங்கும் மேகக் கடவுளை நான் வேண்டினால் என்ன?   நானிங்கே புலம்பும்படியாக விட்டு பொருள் விரும்பிச் சென்றார் வழியில் மரத்தின் இலைகள் கிளைகளெல்லாம் வாடும்படி தகிக்கும் சூரியனே, அங்கெல்லாம் உன் சினம் தணிந்து அருளை நீ சொரிகவென நான் இறைஞ்சினால் என்ன?   என் அன்பின் திறம் எண்ணாது என்னை இங்கே துயருறவிட்டு பொருள் தேடிச் சென்றாரின் வழி கடுமையானது. புற்களெல்லாம் எரிந்து தீப்பிழம்பாய்ப் பரவிவரும். அதனூடு வருகையிலே காற்றும் கொதிப்பேறும். அதனால், காற்றே, உன் கட...