Posts

தன் நிழலைத் தான் விமர்சித்தல்

Image
  தன் நிழலைத் தான் விமர்சித்தல் ‘ மேகலை கதா’ குறித்த சில கருத்துக்கள் -தேவகாந்தன்-   இன்றளவும் ஐந்தாம் ஆறாம் அலைகளென சர்வதேச அளவில் விரிந்துகொண்டிருக்கும் பெருந்தொற்றான கொவிட்- 19 காலத்துள் மூடுண்டு போனது 2020 மார்ச்சில் வெளிவந்த ‘மேகலை கதா’. அதுபற்றி அதன் படைப்பாளியாய் எனக்கு நிறைந்த அக்கறைகள் உண்டு. ஒரு இருபதாண்டுக் காலத்துக்கும் மேலான கருச் சுமையின் எழுத்து வடிவமது. மேலும் எழுதும் காலத்திலும் நிறையச் சிந்திக்கவும் எழுதியதைத் திருத்தியும் மாற்றியும் எழுதியென நிறைந்த உழைப்பை நான் அதற்காய் செலவிட்டிருக்கிறேன். ஆயினும் சில நண்பர்களின் மேலெழுந்தவாரியான சில தொலைபேசி உரையாடலில் செய்யப்பட்ட அபிப்பிராயப் பகிர்வுகள் தவிர, மதிப்புரை விமர்சனமென வேறு வடிவங்களில் கருத்துக்கள் அபிப்பிராயங்களேதும் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை. சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் அதுபற்றிய மதிப்பீட்டினை அறிய என்னுள் அளப்பரிய ஆதங்கமுண்டு. அந்நூல் குறித்த மதிப்பீட்டினை எவ்வண்ணம், யாரிடமிருந்து நான் அறிதல் கூடும்? இப்போதைக்கு எத்தரப்பிலிருந்தும் சாத்தியமில்லையென்றே படுகிறது. சாதாரண வாசகர்களையல்ல, பி

குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் 2

Image
  1 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே.                                         -இறையனார்   ‘பூந்துகள் ஆய்ந்துண்ணும் தும்பியே, உண்மை கூறு; இவ்வரிவை கூந்தலிலும்    மணமுள்ள மலரை நீ எங்கேனும் அறிந்ததுண்டோ?’ எனச் சுருக்கமாக இப்பாடலின் அர்த்தத்தை விளக்கலாம். புணர்ச்சியின் உவகை வகையானதும், குறிஞ்சித் திணைக்கானதுமான இக் குறுந்தொகையின் இப் பாடலுக்கு பின்னால் ஒரு கதையும் பிறந்தது பிழையாக. அதுபற்றியே இதில் முதன்மையாக நோக்கப்படவுள்ளது. குறுந்தொகை பாண்பாடற் தொகுப்பில் இரண்டாவதாய் இடம்பெற்றிருகக்கிற பாடலிது. இறையனார் பாடியதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாடலென்னவோ சிறந்த பாடலாகத்தான் தோன்றுகிறது. ஆயினும் இந்த சிறப்பு என்கிற அடைக்கு மேலான புகழை இது பெற்றிருப்பது அதிசயம். இப் பாடலின் தோற்றத்தின் பின்னாலுள்ள கதை, இதை இதன் தகுதிக்கும் மேலான தளத்துக்கு உயர்த்தியிருக்கிறதென துணிந்து சொல்லமுடியும். அக் கதையினை விமர்சனரீதியாக அணுகும்போது தமிழார்வலர் சிலரின் நம்பிக்கையை

குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில்

Image
     குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் -தேவகாந்தன்   சங்க இலக்கியத்தின் மிகப்பெரும் சிறப்பும் பலமும் அதன் சுருங்கச் சொல்லும் திறனில் அடங்கியுள்ளதென்பது, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ (2019) நூலில் ஆழமாக வற்புறுத்தப்படும் அம்சமாகும். அவர் வார்த்தைகளை அடியளவுப்படி எடுத்தாலுமே 3-6 அடிகளையுடைய ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அடுத்ததாக நாலடிச் சீறெல்;லையையும் எட்டடி பேரெல்லையையும் கொண்டதாய் குறுகத் தறித்த குறளாக விளங்குகின்றன குறுந்தொகைத் தொகுப்பிலுள்ள பாண்பாட்டுக்கள். அத் தொகுப்பில் பெருந்தேவனாரின்; கடவுள் வாழ்த்து உட்பட   401 பாக்கள் உள்ளன. இத் தொகை நூல் அரசன் பூரிக்கோ என்பான் காலத்தில் புலவர் பூரிக்கோவால் தொகுக்கப்பட்டது என்பர். இதன் 381   பாக்களுக்கு பேராசிரியர் உரையெழுதினாரென்றும், மீதி 20 பாக்களுக்கு நச்சிரினார்க்கினியர் உரை எழுதினாரென்றும் கூறப்படுகிறது. அவை இப்போது கிடைக்கப்பபெற்றில என்றும் அறிகிறோம். இதற்கான திணைக் குறிப்பு உரைக் குறிப்புக்கள் உட்பட்ட முதல் பதிப்பினை 1915இல் திருக்கண்ணபுரத் தலத்தான் தி

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி

  தேவகாந்தனின் ‘ காற்று மரங்களை அசைக்கின்றது ’ தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் -     ஈழக்கவி “ப டைப்பு மட்டுமல்ல, படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம். அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும், பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும் இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும் இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும், வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும் விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.” -     காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211   இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, Youtube ( www.youtube.com/watch?v=LHovj0cb_GY ) இல் “ஆறு சிறுகதைகள் ஒரு பகு