(சென்ற ஆண்டின் இறுதியில் தாய்வீடு பதிப்பாக வெளிவந்த எனது 'சாம்பரில் திரண்ட சொற்கள்' என்ற நாவலின் என்னுரை) இது எனது பதின்மூன்றாவது நாவல். 2022 மேயிலிருந்து 2023 ஓகஸ்ற் வரை ‘தாய்வீடு” மாதாந்திரியில் வெளிவந்த ‘சாம்பரில் திரண்ட சொற்கள்’ என்ற தொடர்கதையே அதே தலைப்பில் இப்போது நாவலாக நூலாக்கம் காண்கிறது. இது, தொடராக வந்த வடிவத்தில் பிரதி இப்போது இல்லையென்பதைத் தெரிவிக்குமென்றாலும், சற்று விளக்கமாக இதை நான் இங்கே சொல்வது அவசியம். பல்வேறு உலகமொழிகளிலும் நாவலின் தொடக்க வரலாறு பெரும்பாலும் தொடர்கதைகளினூடாகவே நடந்து வந்திருக்கிறது. அவற்றுள் பல சிறந்த நாவல்களும் தோற்றம்பெற்றன. ஆயினும், தொடராக வந்த வடிவத்துக்கும் நூலாக வந்த வடிவத்துக்கும் இடையிலான செம்மையாக்கத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவான தகவல்களேதும் வெளிப்படக் கிடைக்கவில்லை; அல்லது அதில் நாம் கூடிய கவனம் செலுத்தவில்லை. 2012 ஜனவரி – 2013 டிசம்பர் வரையான காலத்தில் ‘தாய்வீ’ட்டில் வெளிவந்த ‘நதி’யென்ற தலைப்பிலான எனது தொடரொன்று பின்னர் 2017 ஜனவரியில் ‘நதிமேல் தனித்தலையும் சிறுபுள்’ என்ற தலைப்பில் தமிழகத்தின் நற்றி...
Posts
Showing posts from 2025
'சகுனியின் சிரம்' தொகுப்பு குறித்த விமர்சனம்
- Get link
- X
- Other Apps

சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல் த.அகிலன் தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது . ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை . ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார் . மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம் , எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை . தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள் . நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால் , போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின் வாழ்வை அவருடைய சொற்கள் தீண்டியிருக்கின்றன . ஓயாமல் தமிழ் நிலத்தின் வாழ்வைப் பாடும் பாணன் அவர் . இங்கே எழுதப்பட்டிருக்கும் இயக்கச் சண்டைகள் , கட்சிச் சண்டைகள் , சேறடிப்புக்களைத் தாண்டி தமிழ் வாழ்வையறிய எதிர்காலத்தின் வரலாற்றைக் கற்பவர் தேவகாந்தனைத்தான் படிக்கவேண்டும் . தாங்கள் தவறவிட்ட தருணத்தை , மனி...