கலித்தொகைப் பாடல்களின் 3
3 வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய், சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி, யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம்வெதும்ப விரிகதிர் தெறுதலின் அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகி கொலையஞ்சா வினைவரால் கோல்கோடியவன் நிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம். இடைகொண்டு பொருள்வயின் இறத்திநீ எனக்கேட்பின் உடைபு நெஞ்சுக ஆங்கே ஒளிஓடற்பாள் மன்னோ. படையமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ புடைபெயர்வாய் ஆயினும் புலம்புகொண்டு இனைபவள். முனிவின்றி முயல்பொருட்கு இறத்திநீ எனக்கேட்பின் பனிய கண் படல்ஒல்லா படர்கூர்கிற் பாள்மன்னோ. நனிகொண்ட சாயலாள் நயந்துநீ நகையாகத் துனிசெய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள் பொருள்நோக்கிப் பிரிந்துநீ போகுதியெனக் கேட்பின் மருள்நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற் பாள்மன்னோ, இருள்நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்றநின் அருள்நோக்கம் அழியினும் அவலம்கொண்டு அழிபவள் வினைவெஃகி நீசெலின் விடும்இவள் உயிர் என புனையிழாய் நின்நிலை யான்கூறப் பையென நிலவுவேல் நெடுந்தகை நீளிடைச் செலவுஒழி...