Posts

Showing posts from 2025

கலித்தொகைப் பாடல்களின் 3

  3   வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய், சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி, யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான்   இறுதிபோல் வேரொடு மரம்வெதும்ப விரிகதிர் தெறுதலின் அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகி கொலையஞ்சா வினைவரால் கோல்கோடியவன் நிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்.   இடைகொண்டு பொருள்வயின் இறத்திநீ எனக்கேட்பின் உடைபு நெஞ்சுக ஆங்கே ஒளிஓடற்பாள் மன்னோ. படையமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ புடைபெயர்வாய் ஆயினும் புலம்புகொண்டு இனைபவள். முனிவின்றி முயல்பொருட்கு இறத்திநீ எனக்கேட்பின் பனிய கண் படல்ஒல்லா படர்கூர்கிற் பாள்மன்னோ. நனிகொண்ட சாயலாள் நயந்துநீ நகையாகத் துனிசெய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள் பொருள்நோக்கிப் பிரிந்துநீ போகுதியெனக் கேட்பின் மருள்நோக்கம் மடிந்து ஆங்கே மயல்கூர்கிற் பாள்மன்னோ, இருள்நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்றநின் அருள்நோக்கம் அழியினும் அவலம்கொண்டு அழிபவள் வினைவெஃகி நீசெலின் விடும்இவள் உயிர் என   புனையிழாய் நின்நிலை யான்கூறப் பையென நிலவுவேல் நெடுந்தகை நீளிடைச் செலவுஒழி...

கலித் தொகைப் பாடல்களின்.... 2

  ரசனைக் குறிப்பு 2 எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் நெறிப்படச் சுவல் அசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர், வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை என்மகள் ஒருத்தியும் பிறர்மகன் ஒருவனும் தம்முள்ளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ பெரும! காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை. ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய  மாணிழை மடவரல் தாயிர் நீர் போறிர். பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும். நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும். தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுழே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும். சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. எனவாங்கு இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் அறந்தலை பிரியா ஆறும்மற் றதுவே. (பாலைக் கலி: 8) 'உடன்போக்கு' என்பது காதலின் அறம். இக் கருத்துருவத்தை விளக்குகின்ற பாடலாகவன்றி, ஒரு சிறிய கதையாக, ஓர் ஓர...

கலித்தொகைப் பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் 1

  ரசனைக் குறிப்பு; 1   மரையா மரை கவர மாரி வறப்ப வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடை செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்கு தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந் துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் என்னீர் அறியாதீர்போல இவை கூறல்? நின்னீரல்ல, நெடுந்தகாய்! எம்மையும் அன்பு அறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு. துன்பம் துணையாக நாடின் அதவல்லது இன்பமும் உண்டோ எமக்கு? (பாலைக் கலி 5)   மாரி பொய்த்துப் போயிற்று.                                                                                       ...

கலித்தொகைப் பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் (முற்குறிப்பு 2)

  முற்குறிப்பு 2   எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆதியனவற்றை ‘சங்கப் பனுவல்கள்’ எனக் குறிப்பிடுவதிலும், ‘பாண் பாட்டு’ என்று குறிப்பிடலே மிக்க பொருத்தமானது என்பார் பேராசிரியர் க.கைலாசபதி. அத்தனைக்கு அவை பாணர் பாடல்களாக – வாய்மொழி இலக்கிய பாரம்பரியம் கொண்டவையாக, இருந்தன. மேலும் வாய்மொழி இலக்கிய அடையாளங்களாக கீழ்நிலை மக்களின் அழைத்தல், உசாவல் பண்புகளை இப் பாண்பாட்டுக்கள் பொதுவில் கொண்டிருப்பனவாயினும், கலித்தொகையில் அவற்றை கூடிய அளவில் ஒருவரால் கண்டுகொள்ள முடியும். கலிப்பாட்டில் இயன்றிருப்பதனால்   கலித்தொகையென ஆகிய இத் தொகை நூல், நேர்நேர் உரையாடலும், நாடகத் தமிழ்ப் பண்பினையும் கொண்டதாய் இருப்பது மிக்க ரசனையினை வாசகர்க்கு அளிக்கின்றது. கலித்தொகையிலுள்ள முதற் பகுதியான பாலைத் திணை பிரிதல் ஒழுக்கத்தைப் பேசுகிறது. அது பொருள் வயிற் பிரிவு, போர் வயிற் பிரிவு, கல்வி வயிற் பிரிவென்ற காரணங்களில் நிகழுமாயினும், பாலைக் கலியில் அதிகமும் பொருள் வயிற் பிரிவே பேசப்படுகிறது. இதிலுள்ள முப்பத்தைந்து பாட்டுக்களும் தலைவன் பொருள் தேடும் முகத்தான் பிரிந்துசெல்ல நினைப்புழி, அவனை பல்வேறு கார...

கலித்தொகைப் பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் (முற்குறிப்பு)

 முற்குறிப்பு 1 எட்டுத் தொகை நூல்களுள் 'கற்றறிந்தார் ஏற்றும் கலி'யென உரைக்கப்படுவது கலித்தொகையாகும்.  முல்லை குறிஞ்சி மருதம் என்ற ஒழுங்கில் சொல்லப்படும் மரபானது மீறப்பட்டு, பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என்ற திணை ஒழுங்கில் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.  பாலைக் கலியை பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியை கபிலரும், மருதக் கலியை இளநாகனும், முல்லைக் கலியை நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர் என்பது பொது வழக்கு. ஆனால் புலவர் நல்லந்துவனாரே இவ்வைந்து திணைகளையும் பாடினாரென்பார் கலித்தொகையை முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை (1887). இதை கே.என்.சிவராஜபிள்ளையும் எஸ்.வையாபுரிப் பிள்ளையும் ஆதரிப்பர்.  இது எப்படியாயினும், கலித்தொகையின் ஒவ்வொரு திணையையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் பாடினர் என்பதும், அதில் நெய்தற் கலியைப் பாடிய நல்லந்துவனாரே இவ் ஐந்து திணைகளையும் தொகுத்தாரென்பதுமே அதிக வழக்காறாய் உள்ளது. இது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதென்பதே தமிழறிஞர் பலரது கருத்தாக இருக்கிறது. கலித்தொகைப் பாடல்களின் கற்கை மிக இனிய அனுபவங்களைக் கொடுக்கக...

சாம்பரில் திரண்ட சொற்கள்பற்றி... வ.ந.கிரிதரன்

Image
  தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -   - வ.ந.கிரிதரன் -   வ.ந.கிரிதரன் பக்கம்   20 ஜூன் 2025 'சாம்பரில் திரண்ட சொற்கள்'  எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல்.  'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான  தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான  வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை .  அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான்  நினைவில் வைத்திருக்கின்றோம்.  'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம்.  'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்...
 (சென்ற 11| 2024 இல் தாய்வீடு பதிப்பாக வெளிவந்த எனது 'சாம்பரில் திரண்ட சொற்கள்' என்ற நாவலின்  என்னுரை)   இது எனது பதின்மூன்றாவது நாவல். 2022 மேயிலிருந்து 2023 ஓகஸ்ற் வரை ‘தாய்வீடு” மாதாந்திரியில் வெளிவந்த ‘சாம்பரில் திரண்ட சொற்கள்’ என்ற  தொடர்கதையே அதே தலைப்பில் இப்போது நாவலாக நூலாக்கம் காண்கிறது. இது, தொடராக வந்த வடிவத்தில் பிரதி இப்போது இல்லையென்பதைத் தெரிவிக்குமென்றாலும், சற்று விளக்கமாக இதை நான் இங்கே சொல்வது அவசியம். பல்வேறு உலகமொழிகளிலும் நாவலின் தொடக்க வரலாறு பெரும்பாலும் தொடர்கதைகளினூடாகவே நடந்து வந்திருக்கிறது. அவற்றுள் பல சிறந்த நாவல்களும் தோற்றம்பெற்றன. ஆயினும், தொடராக வந்த வடிவத்துக்கும் நூலாக வந்த வடிவத்துக்கும் இடையிலான செம்மையாக்கத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவான தகவல்களேதும் வெளிப்படக் கிடைக்கவில்லை; அல்லது அதில் நாம் கூடிய கவனம் செலுத்தவில்லை. 2012 ஜனவரி – 2013 டிசம்பர் வரையான காலத்தில் ‘தாய்வீ’ட்டில் வெளிவந்த ‘நதி’யென்ற தலைப்பிலான எனது தொடரொன்று பின்னர் 2017 ஜனவரியில் ‘நதிமேல் தனித்தலையும் சிறுபுள்’ என்ற தலைப்பில் தமிழகத்தின் நற்றிணை பத...

'சகுனியின் சிரம்' தொகுப்பு குறித்த விமர்சனம்

Image
  சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல்     த.அகிலன் தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது . ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை . ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார் . மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம் , எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை . தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள் . நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால் , போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின் வாழ்வை அவருடைய சொற்கள் தீண்டியிருக்கின்றன . ஓயாமல் தமிழ் நிலத்தின் வாழ்வைப் பாடும் பாணன் அவர் . இங்கே எழுதப்பட்டிருக்கும் இயக்கச் சண்டைகள் , கட்சிச் சண்டைகள் , சேறடிப்புக்களைத் தாண்டி தமிழ் வாழ்வையறிய எதிர்காலத்தின் வரலாற்றைக் கற்பவர் தேவகாந்தனைத்தான் படிக்கவேண்டும் .    தாங்கள் தவறவிட்ட தருணத்தை , மனி...