திருமாவளவன் காலமான செய்தியறிந்து மனது கனத்துக்கிடக்கிறது. இலக்கியத்துறையில் சக பயணி மட்டுமல்ல, ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்து, கூர் கனடா தமிழ் கலை இலக்கிய ஆண்டுத் தொகுப்புகளில் ஆலோhசனைக் குழுவிலும் ஒருவராக இருந்த அவருடன் மிகநெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. சோகத்தின் இவ்வளவு கனதிக்கு இவையெல்லாமே காரணமாக முடியும். அவரது இழப்பில் வருந்தும் அவரது மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருடனும், உறவினர் நண்பர்களுடனும் என் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.
வாசிப்பின் சுகம்: 2
அம்மாவின் ரகசியம் (குறுநாவல்) சுநேத்ரா கருணநாயக தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்;யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப்படைப்பு. இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இ...
Comments