Posts

லங்காபுரம்

Image
தேவகாந்தனின் "லங்காபுரம்" - முதல் வாசிப்பின் பகிர்தல்கள்.. பிரதீபன் சிவபாலன் தேவகாந்தன் அவர்களின் லங்காபுரம், விதி ஆகிய நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். வைகறை பத்திரிகையில் தொடராக வெளிவந்து இன்று அச்சுருப்பெற்று வெளியாகும் இந்த லங்காபுரம் நாவலுக்கு என்னை முதல் வாசகனாக இருக்கச் சொல்லிக் கேட்ட தேவகாந்தனின் அன்புக்கு முதலில் நன்றியை சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நாவலின் மீதான முதல் தொடுகையை நானும் செய்திருக்கிறேன் என்பது என்னளவில் திகில் மிகுந்த பரவசமானது. எல்லா நூல் வெளியீட்டிலும் நான் நினைத்திருக்கிறேன் வெளியிடப்படும் அந்த நூலை முதன் முதலில் வாசிப்பவர்கள் என்ன விதமான மனநிலையை அடைவார்கள் என்று – இன்று அந்த முதல் மனநிலையின் சில நொடிகளைத் தன்னும் உங்களோடு பேசும் சந்தர்ப்பத்தை அச்சத்துடன் கூடிய பொறுப்பாகவே உணர்கிறேன். இதனையும் தாண்டி இந்த நூலுக்கு ஒரு விமர்சனத்தையோ மதிப்புரையையோ என்னால் முன் வைக்க முடியாது என்பதை வாக்குமூலமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். “கதைகள் இன்பத்துக்காகவே புனையப்படுகின்றன. இன்பத்துக்கான புனைவுக...

தலையங்கம்: தேவகாந்தன்

கூர் தலையங்கம்: தேவகாந்தன் ‘அழிவின் கதறலையும் நெஞ்சில் நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நான் உங்களிடம் வருகிறேன்…’  ஏர்னஸ்ரோ சே குவேரா 1 புகுந்த ஒரு நாட்டின் மொழியினுள்ளும், பண்பாட்டினுள்ளும் ஓரினம் தன்னை விரும்பியே ஒப்புக்கொடுப்பதில்லை. காலவோட்டத்தில் மெல்ல மெல்லவாய் அது தானே நிகழ்கிறது. எனினும் அதன் வேரடியாக அதன் அசலான இனத்துவசு; கூறுகள் மெதுவான மாற்றங்களோடும் தம்மைத் தக்கவைத்துக்கொண்டு புதிய பரிமாணத்துக்காகக் காத்துநிற்கவே செய்யும். நாளைய புலம்பெயர் இலக்கியத்தின் வெளிப்பாடு கனடாவை, இங்கிலாந்தை, அவுஸ்திரேலியாவை, அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த மொழியினூடாக நிகழப்போகிறது என்பதில் ஐயப்பாடுகளுக்கு இடமில்லை. அது ஆங்கிலத்தின் வழியாகவேதான் இருக்கப்போகிறது. ஆனாலும் நாளைய தலைமுறையின் படைப்பு மொழியில் இந்த இனம்சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு நிச்சயமாக இருக்கவே செய்யும். அவர் தம் சிந்தனையின் அசலான திசை அதனடியாகவேதான் அமையும். அதன் காரணமாய், அப் படைப்பு கனடா ஆங்கில இலக்கியமாக அடையாளப்படும் நேரத்திலும், அவர் தம் வேரடி சார்ந்த வெளிப்பாடுகளின் அம்சங்களைக் குறிக்கும் வண்ணம் கீழ்த்திசைக...