கலித்தொகை பாடல்களின் தேர்வும், தேர்ந்த பாடல்களின் ரசனைக் குறிப்பும் 3
ரசனைக் குறிப்பு; 1 மரையா மரை கவர மாரி வறப்ப வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடை செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்கு தண்ணீர் பெறாஅத் தடுமாற்றருந் துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் என்னீர் அறியாதீர்போல இவை கூறல்? நின்னீரல்ல, நெடுந்தகாய்! எம்மையும் அன்பு அறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு. துன்பம் துணையாக நாடின் அதவல்லது இன்பமும் உண்டோ எமக்கு? (பாலைக் கலி 5) மாரி பொய்த்துப் போயிற்று. ...